7 20
உலகம்செய்திகள்

ட்ரம்ப்பின் வெற்றியால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அச்சம்

Share

ட்ரம்ப்பின் வெற்றியால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அச்சம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றிபெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி வரி அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சுவிட்சர்லாந்து (Switzerland) போன்ற நாடுகள் இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்காவிற்க்கே அதிகப்படியாக ஏற்றுமதி செய்கின்றன.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் இறக்குமதி வரியை 20 சதவீதம் வரை அறவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வரி விதிக்கப்படுமானால் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தில் 0.2% இழப்பு முதற்கட்டமாகவே ஏற்படும் என நம்பப்படுவதோடு நிலைமை தொடருமானால் 1% வரை பொருளாதார இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, சீனாவிலிருந்து (China) அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 60% வரியும் ஜேர்மனியிலிருந்து (Germany) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 20% வரியும் அறவிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தானியங்கி துறை மற்றும் மருந்தகத் துறை உள்ளிட்ட அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஜேர்மன் தயாரிப்புகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், பிரித்தானியாவிற்கு (UK) மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...