8 34
உலகம்செய்திகள்

ஆண்டுகளில் முதல் முறையாக… புலம்பெயர் மக்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

Share

ஆண்டுகளில் முதல் முறையாக… புலம்பெயர் மக்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

கடந்த பல வருடங்களில் முதன்முறையாக நாட்டுக்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா வெகுவாகக் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மக்களிடையே செல்வாக்கு சரிந்துவரும் நிலையில், ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் ட்ரூடோ அரசாங்கம் எடுக்கும் ஒரு முடிவாகவே இது பார்க்கப்படுகிறது.

 

மேலும், 2025ல் நிரந்தர வதிவிட அனுமதி 395,000 பேர்களுக்கும் 2026ல் 380,000 பேர்களுக்கும் 2027ல் 365,000 பேர்களுக்கும் என படிப்படியாக குறைக்க உள்ளது. 2024ல் இந்த எண்ணிக்கை 485,000 என இருப்பதாகவே அரசாங்க தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.

 

மட்டுமின்றி, தற்காலிக வதிவிட அனுமதி எண்ணிக்கையை 300,000ல் இருந்து 2025ல் 30,000 என தடாலடியாக குறைக்க உள்ளது. பொதுவாக புலம்பெயர் மக்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று.

 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புலம்பெயர் மக்கள் மீதான கனடாவின் அணுகல் சரிவடைந்து காணப்படுகிறது. பெரும்பாலும் இது அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

 

மேலும், கனடாவில் ஏற்பட்டுள்ள குடியிருப்பு பற்றாக்குறைக்கு காரணம் புலம்பெயர் மக்கள் என்றே பரவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மட்டுமின்றி, விலைவாசி உயர்வுக்கும், சுகாதார அமைப்புகள் அவநம்பிக்கையான நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் காரணம் புலம்பெயர் மக்கள் என்றே குறிப்பிட்ட கனேடிய மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

 

அக்டோபர், 2025க்குப் பிறகு பெடரல் தேர்தல் நடைபெறவுள்ளதால், கனேடிய அரசியலில் இந்தப் பிரச்சினை மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

 

மட்டுமின்றி, வெளிவரும் கருத்துக்கணிப்புகளில் கனேடிய மக்கள்தொகையில் புலம்பெயர் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...