8 34
உலகம்செய்திகள்

ஆண்டுகளில் முதல் முறையாக… புலம்பெயர் மக்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

Share

ஆண்டுகளில் முதல் முறையாக… புலம்பெயர் மக்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

கடந்த பல வருடங்களில் முதன்முறையாக நாட்டுக்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா வெகுவாகக் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மக்களிடையே செல்வாக்கு சரிந்துவரும் நிலையில், ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் ட்ரூடோ அரசாங்கம் எடுக்கும் ஒரு முடிவாகவே இது பார்க்கப்படுகிறது.

 

மேலும், 2025ல் நிரந்தர வதிவிட அனுமதி 395,000 பேர்களுக்கும் 2026ல் 380,000 பேர்களுக்கும் 2027ல் 365,000 பேர்களுக்கும் என படிப்படியாக குறைக்க உள்ளது. 2024ல் இந்த எண்ணிக்கை 485,000 என இருப்பதாகவே அரசாங்க தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.

 

மட்டுமின்றி, தற்காலிக வதிவிட அனுமதி எண்ணிக்கையை 300,000ல் இருந்து 2025ல் 30,000 என தடாலடியாக குறைக்க உள்ளது. பொதுவாக புலம்பெயர் மக்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று.

 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புலம்பெயர் மக்கள் மீதான கனடாவின் அணுகல் சரிவடைந்து காணப்படுகிறது. பெரும்பாலும் இது அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

 

மேலும், கனடாவில் ஏற்பட்டுள்ள குடியிருப்பு பற்றாக்குறைக்கு காரணம் புலம்பெயர் மக்கள் என்றே பரவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மட்டுமின்றி, விலைவாசி உயர்வுக்கும், சுகாதார அமைப்புகள் அவநம்பிக்கையான நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் காரணம் புலம்பெயர் மக்கள் என்றே குறிப்பிட்ட கனேடிய மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

 

அக்டோபர், 2025க்குப் பிறகு பெடரல் தேர்தல் நடைபெறவுள்ளதால், கனேடிய அரசியலில் இந்தப் பிரச்சினை மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

 

மட்டுமின்றி, வெளிவரும் கருத்துக்கணிப்புகளில் கனேடிய மக்கள்தொகையில் புலம்பெயர் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...