8 34
உலகம்செய்திகள்

ஆண்டுகளில் முதல் முறையாக… புலம்பெயர் மக்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

Share

ஆண்டுகளில் முதல் முறையாக… புலம்பெயர் மக்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

கடந்த பல வருடங்களில் முதன்முறையாக நாட்டுக்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா வெகுவாகக் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மக்களிடையே செல்வாக்கு சரிந்துவரும் நிலையில், ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் ட்ரூடோ அரசாங்கம் எடுக்கும் ஒரு முடிவாகவே இது பார்க்கப்படுகிறது.

 

மேலும், 2025ல் நிரந்தர வதிவிட அனுமதி 395,000 பேர்களுக்கும் 2026ல் 380,000 பேர்களுக்கும் 2027ல் 365,000 பேர்களுக்கும் என படிப்படியாக குறைக்க உள்ளது. 2024ல் இந்த எண்ணிக்கை 485,000 என இருப்பதாகவே அரசாங்க தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.

 

மட்டுமின்றி, தற்காலிக வதிவிட அனுமதி எண்ணிக்கையை 300,000ல் இருந்து 2025ல் 30,000 என தடாலடியாக குறைக்க உள்ளது. பொதுவாக புலம்பெயர் மக்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று.

 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புலம்பெயர் மக்கள் மீதான கனடாவின் அணுகல் சரிவடைந்து காணப்படுகிறது. பெரும்பாலும் இது அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

 

மேலும், கனடாவில் ஏற்பட்டுள்ள குடியிருப்பு பற்றாக்குறைக்கு காரணம் புலம்பெயர் மக்கள் என்றே பரவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மட்டுமின்றி, விலைவாசி உயர்வுக்கும், சுகாதார அமைப்புகள் அவநம்பிக்கையான நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் காரணம் புலம்பெயர் மக்கள் என்றே குறிப்பிட்ட கனேடிய மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

 

அக்டோபர், 2025க்குப் பிறகு பெடரல் தேர்தல் நடைபெறவுள்ளதால், கனேடிய அரசியலில் இந்தப் பிரச்சினை மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

 

மட்டுமின்றி, வெளிவரும் கருத்துக்கணிப்புகளில் கனேடிய மக்கள்தொகையில் புலம்பெயர் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...