9 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் 70 ஏக்கர் நிலம் வாங்கிய புலம்பெயர்ந்தோர்: ரகசிய செயல்

Share

அமெரிக்காவில் 70 ஏக்கர் நிலம் வாங்கிய புலம்பெயர்ந்தோர்: ரகசிய செயல்

அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஒருவர், அங்கு 70 ஏக்கர் நிலம் வாங்கி, 40 ஆண்டுகளாக அதைத் தோண்டிவந்துள்ளார்.

இத்தாலிக்குச் சொந்தமான சிசிலித் தீவிலிருந்து 1905ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குச் சென்ற பல்தசாரே (Baldassare Forestiere) என்னும் புலம்பெயர்ந்தோர், அங்கு எலுமிச்சைத் தோட்டம் அமைக்கலாம் என 70 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

ஆனால், அதற்குப் பிறகுதான் பல்தசாரேக்கு புரிந்திருக்கிறது, கலிபோர்னியாவிலுள்ள வெப்பநிலையில், அங்கு பண்ணை அமைப்பது கடினம் என்பது.

ஆனாலும் மனம் தளராமல் 20 அடி ஆழம் வரை தோண்டியதும், அங்கு நல்ல மண் இருப்பதைக் கண்டுள்ளார் பல்தசாரே. இன்னொரு பக்கம் அங்குள்ள வெயிலை அவரால் தாங்கமுடியவில்லை.

வெயில் தாங்க முடியாமல், தான் வசிப்பதற்கு நிலத்துக்கு அடியில் ஒரு அறையை உருவாக்கியுள்ளார். அத்துடன் நில்லாமல், தொடர்ந்து தோண்டி, நிலத்துக்கு அடியிலேயே எலுமிச்சை வகை மரங்களை வளர்த்திருகிறார் அவர்.

பகலெல்லாம் வேலைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியதும் தோட்ட வேலை செய்திருக்கிறார். அவர் எதிர்பார்த்ததுபோலவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு மரங்கள் பழங்களைக் கொடுக்க, வேலையை விட்டுவிட்டு, அவற்றை விற்கத் துவங்கியுள்ளார் பல்தசாரே.

அப்படி தொடங்கியது, 40 ஆண்டுகள் தொடர்ந்து பூமிக்கடியில் பள்ளம் தோண்டியிருக்கிறார். பெரிய பண்ணை, தனக்கொரு வீடு என பிரம்மாண்டமான கட்டிடங்களை பூமிக்கடியில் கட்டியிருக்கிறார் பல்தசாரே.

அவர் தொடர்ந்து பூமிக்கடியில் தோண்டிக்கொண்டே இருப்பதைப் பார்த்த உள்ளூர் மக்கள், அவர் ஒரு பெண் மீதான காதலால் அவதியுற்றுவருவதாக வதந்தி பரப்பியிருக்கிறார்கள்.

அடுத்தபடியாக பொதுமக்கள் வெயில் காலத்தில் தங்குவதற்காக பூமிக்கடியில் ரிசார்ட் ஒன்றை உருவாக்குவது என திட்டமிட்டுள்ளார் அவர். ஆனால், அது கட்டி முடிக்கப்படுவதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார்.

அவரது மறைவுக்குப் பின், அவரது சகோதரர் குடும்பம் அந்த இடத்தை தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளது. தற்போது, அந்த ரகசிய பண்ணை, வீடு முதலானவை மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஒருவர், அங்கு 70 ஏக்கர் நிலம் வாங்கி, 40 ஆண்டுகளாக அதைத் தோண்டிவந்துள்ளார்.

இத்தாலிக்குச் சொந்தமான சிசிலித் தீவிலிருந்து 1905ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குச் சென்ற பல்தசாரே (Baldassare Forestiere) என்னும் புலம்பெயர்ந்தோர், அங்கு எலுமிச்சைத் தோட்டம் அமைக்கலாம் என 70 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

ஆனால், அதற்குப் பிறகுதான் பல்தசாரேக்கு புரிந்திருக்கிறது, கலிபோர்னியாவிலுள்ள வெப்பநிலையில், அங்கு பண்ணை அமைப்பது கடினம் என்பது.

ஆனாலும் மனம் தளராமல் 20 அடி ஆழம் வரை தோண்டியதும், அங்கு நல்ல மண் இருப்பதைக் கண்டுள்ளார் பல்தசாரே. இன்னொரு பக்கம் அங்குள்ள வெயிலை அவரால் தாங்கமுடியவில்லை.

வெயில் தாங்க முடியாமல், தான் வசிப்பதற்கு நிலத்துக்கு அடியில் ஒரு அறையை உருவாக்கியுள்ளார். அத்துடன் நில்லாமல், தொடர்ந்து தோண்டி, நிலத்துக்கு அடியிலேயே எலுமிச்சை வகை மரங்களை வளர்த்திருகிறார் அவர்.

பகலெல்லாம் வேலைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியதும் தோட்ட வேலை செய்திருக்கிறார். அவர் எதிர்பார்த்ததுபோலவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு மரங்கள் பழங்களைக் கொடுக்க, வேலையை விட்டுவிட்டு, அவற்றை விற்கத் துவங்கியுள்ளார் பல்தசாரே.

அப்படி தொடங்கியது, 40 ஆண்டுகள் தொடர்ந்து பூமிக்கடியில் பள்ளம் தோண்டியிருக்கிறார். பெரிய பண்ணை, தனக்கொரு வீடு என பிரம்மாண்டமான கட்டிடங்களை பூமிக்கடியில் கட்டியிருக்கிறார் பல்தசாரே.

அவர் தொடர்ந்து பூமிக்கடியில் தோண்டிக்கொண்டே இருப்பதைப் பார்த்த உள்ளூர் மக்கள், அவர் ஒரு பெண் மீதான காதலால் அவதியுற்றுவருவதாக வதந்தி பரப்பியிருக்கிறார்கள்.

அடுத்தபடியாக பொதுமக்கள் வெயில் காலத்தில் தங்குவதற்காக பூமிக்கடியில் ரிசார்ட் ஒன்றை உருவாக்குவது என திட்டமிட்டுள்ளார் அவர். ஆனால், அது கட்டி முடிக்கப்படுவதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார்.

அவரது மறைவுக்குப் பின், அவரது சகோதரர் குடும்பம் அந்த இடத்தை தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளது. தற்போது, அந்த ரகசிய பண்ணை, வீடு முதலானவை மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...