9 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் 70 ஏக்கர் நிலம் வாங்கிய புலம்பெயர்ந்தோர்: ரகசிய செயல்

Share

அமெரிக்காவில் 70 ஏக்கர் நிலம் வாங்கிய புலம்பெயர்ந்தோர்: ரகசிய செயல்

அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஒருவர், அங்கு 70 ஏக்கர் நிலம் வாங்கி, 40 ஆண்டுகளாக அதைத் தோண்டிவந்துள்ளார்.

இத்தாலிக்குச் சொந்தமான சிசிலித் தீவிலிருந்து 1905ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குச் சென்ற பல்தசாரே (Baldassare Forestiere) என்னும் புலம்பெயர்ந்தோர், அங்கு எலுமிச்சைத் தோட்டம் அமைக்கலாம் என 70 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

ஆனால், அதற்குப் பிறகுதான் பல்தசாரேக்கு புரிந்திருக்கிறது, கலிபோர்னியாவிலுள்ள வெப்பநிலையில், அங்கு பண்ணை அமைப்பது கடினம் என்பது.

ஆனாலும் மனம் தளராமல் 20 அடி ஆழம் வரை தோண்டியதும், அங்கு நல்ல மண் இருப்பதைக் கண்டுள்ளார் பல்தசாரே. இன்னொரு பக்கம் அங்குள்ள வெயிலை அவரால் தாங்கமுடியவில்லை.

வெயில் தாங்க முடியாமல், தான் வசிப்பதற்கு நிலத்துக்கு அடியில் ஒரு அறையை உருவாக்கியுள்ளார். அத்துடன் நில்லாமல், தொடர்ந்து தோண்டி, நிலத்துக்கு அடியிலேயே எலுமிச்சை வகை மரங்களை வளர்த்திருகிறார் அவர்.

பகலெல்லாம் வேலைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியதும் தோட்ட வேலை செய்திருக்கிறார். அவர் எதிர்பார்த்ததுபோலவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு மரங்கள் பழங்களைக் கொடுக்க, வேலையை விட்டுவிட்டு, அவற்றை விற்கத் துவங்கியுள்ளார் பல்தசாரே.

அப்படி தொடங்கியது, 40 ஆண்டுகள் தொடர்ந்து பூமிக்கடியில் பள்ளம் தோண்டியிருக்கிறார். பெரிய பண்ணை, தனக்கொரு வீடு என பிரம்மாண்டமான கட்டிடங்களை பூமிக்கடியில் கட்டியிருக்கிறார் பல்தசாரே.

அவர் தொடர்ந்து பூமிக்கடியில் தோண்டிக்கொண்டே இருப்பதைப் பார்த்த உள்ளூர் மக்கள், அவர் ஒரு பெண் மீதான காதலால் அவதியுற்றுவருவதாக வதந்தி பரப்பியிருக்கிறார்கள்.

அடுத்தபடியாக பொதுமக்கள் வெயில் காலத்தில் தங்குவதற்காக பூமிக்கடியில் ரிசார்ட் ஒன்றை உருவாக்குவது என திட்டமிட்டுள்ளார் அவர். ஆனால், அது கட்டி முடிக்கப்படுவதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார்.

அவரது மறைவுக்குப் பின், அவரது சகோதரர் குடும்பம் அந்த இடத்தை தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளது. தற்போது, அந்த ரகசிய பண்ணை, வீடு முதலானவை மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஒருவர், அங்கு 70 ஏக்கர் நிலம் வாங்கி, 40 ஆண்டுகளாக அதைத் தோண்டிவந்துள்ளார்.

இத்தாலிக்குச் சொந்தமான சிசிலித் தீவிலிருந்து 1905ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குச் சென்ற பல்தசாரே (Baldassare Forestiere) என்னும் புலம்பெயர்ந்தோர், அங்கு எலுமிச்சைத் தோட்டம் அமைக்கலாம் என 70 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

ஆனால், அதற்குப் பிறகுதான் பல்தசாரேக்கு புரிந்திருக்கிறது, கலிபோர்னியாவிலுள்ள வெப்பநிலையில், அங்கு பண்ணை அமைப்பது கடினம் என்பது.

ஆனாலும் மனம் தளராமல் 20 அடி ஆழம் வரை தோண்டியதும், அங்கு நல்ல மண் இருப்பதைக் கண்டுள்ளார் பல்தசாரே. இன்னொரு பக்கம் அங்குள்ள வெயிலை அவரால் தாங்கமுடியவில்லை.

வெயில் தாங்க முடியாமல், தான் வசிப்பதற்கு நிலத்துக்கு அடியில் ஒரு அறையை உருவாக்கியுள்ளார். அத்துடன் நில்லாமல், தொடர்ந்து தோண்டி, நிலத்துக்கு அடியிலேயே எலுமிச்சை வகை மரங்களை வளர்த்திருகிறார் அவர்.

பகலெல்லாம் வேலைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியதும் தோட்ட வேலை செய்திருக்கிறார். அவர் எதிர்பார்த்ததுபோலவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு மரங்கள் பழங்களைக் கொடுக்க, வேலையை விட்டுவிட்டு, அவற்றை விற்கத் துவங்கியுள்ளார் பல்தசாரே.

அப்படி தொடங்கியது, 40 ஆண்டுகள் தொடர்ந்து பூமிக்கடியில் பள்ளம் தோண்டியிருக்கிறார். பெரிய பண்ணை, தனக்கொரு வீடு என பிரம்மாண்டமான கட்டிடங்களை பூமிக்கடியில் கட்டியிருக்கிறார் பல்தசாரே.

அவர் தொடர்ந்து பூமிக்கடியில் தோண்டிக்கொண்டே இருப்பதைப் பார்த்த உள்ளூர் மக்கள், அவர் ஒரு பெண் மீதான காதலால் அவதியுற்றுவருவதாக வதந்தி பரப்பியிருக்கிறார்கள்.

அடுத்தபடியாக பொதுமக்கள் வெயில் காலத்தில் தங்குவதற்காக பூமிக்கடியில் ரிசார்ட் ஒன்றை உருவாக்குவது என திட்டமிட்டுள்ளார் அவர். ஆனால், அது கட்டி முடிக்கப்படுவதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார்.

அவரது மறைவுக்குப் பின், அவரது சகோதரர் குடும்பம் அந்த இடத்தை தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளது. தற்போது, அந்த ரகசிய பண்ணை, வீடு முதலானவை மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....