9 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் 70 ஏக்கர் நிலம் வாங்கிய புலம்பெயர்ந்தோர்: ரகசிய செயல்

Share

அமெரிக்காவில் 70 ஏக்கர் நிலம் வாங்கிய புலம்பெயர்ந்தோர்: ரகசிய செயல்

அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஒருவர், அங்கு 70 ஏக்கர் நிலம் வாங்கி, 40 ஆண்டுகளாக அதைத் தோண்டிவந்துள்ளார்.

இத்தாலிக்குச் சொந்தமான சிசிலித் தீவிலிருந்து 1905ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குச் சென்ற பல்தசாரே (Baldassare Forestiere) என்னும் புலம்பெயர்ந்தோர், அங்கு எலுமிச்சைத் தோட்டம் அமைக்கலாம் என 70 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

ஆனால், அதற்குப் பிறகுதான் பல்தசாரேக்கு புரிந்திருக்கிறது, கலிபோர்னியாவிலுள்ள வெப்பநிலையில், அங்கு பண்ணை அமைப்பது கடினம் என்பது.

ஆனாலும் மனம் தளராமல் 20 அடி ஆழம் வரை தோண்டியதும், அங்கு நல்ல மண் இருப்பதைக் கண்டுள்ளார் பல்தசாரே. இன்னொரு பக்கம் அங்குள்ள வெயிலை அவரால் தாங்கமுடியவில்லை.

வெயில் தாங்க முடியாமல், தான் வசிப்பதற்கு நிலத்துக்கு அடியில் ஒரு அறையை உருவாக்கியுள்ளார். அத்துடன் நில்லாமல், தொடர்ந்து தோண்டி, நிலத்துக்கு அடியிலேயே எலுமிச்சை வகை மரங்களை வளர்த்திருகிறார் அவர்.

பகலெல்லாம் வேலைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியதும் தோட்ட வேலை செய்திருக்கிறார். அவர் எதிர்பார்த்ததுபோலவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு மரங்கள் பழங்களைக் கொடுக்க, வேலையை விட்டுவிட்டு, அவற்றை விற்கத் துவங்கியுள்ளார் பல்தசாரே.

அப்படி தொடங்கியது, 40 ஆண்டுகள் தொடர்ந்து பூமிக்கடியில் பள்ளம் தோண்டியிருக்கிறார். பெரிய பண்ணை, தனக்கொரு வீடு என பிரம்மாண்டமான கட்டிடங்களை பூமிக்கடியில் கட்டியிருக்கிறார் பல்தசாரே.

அவர் தொடர்ந்து பூமிக்கடியில் தோண்டிக்கொண்டே இருப்பதைப் பார்த்த உள்ளூர் மக்கள், அவர் ஒரு பெண் மீதான காதலால் அவதியுற்றுவருவதாக வதந்தி பரப்பியிருக்கிறார்கள்.

அடுத்தபடியாக பொதுமக்கள் வெயில் காலத்தில் தங்குவதற்காக பூமிக்கடியில் ரிசார்ட் ஒன்றை உருவாக்குவது என திட்டமிட்டுள்ளார் அவர். ஆனால், அது கட்டி முடிக்கப்படுவதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார்.

அவரது மறைவுக்குப் பின், அவரது சகோதரர் குடும்பம் அந்த இடத்தை தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளது. தற்போது, அந்த ரகசிய பண்ணை, வீடு முதலானவை மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஒருவர், அங்கு 70 ஏக்கர் நிலம் வாங்கி, 40 ஆண்டுகளாக அதைத் தோண்டிவந்துள்ளார்.

இத்தாலிக்குச் சொந்தமான சிசிலித் தீவிலிருந்து 1905ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குச் சென்ற பல்தசாரே (Baldassare Forestiere) என்னும் புலம்பெயர்ந்தோர், அங்கு எலுமிச்சைத் தோட்டம் அமைக்கலாம் என 70 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

ஆனால், அதற்குப் பிறகுதான் பல்தசாரேக்கு புரிந்திருக்கிறது, கலிபோர்னியாவிலுள்ள வெப்பநிலையில், அங்கு பண்ணை அமைப்பது கடினம் என்பது.

ஆனாலும் மனம் தளராமல் 20 அடி ஆழம் வரை தோண்டியதும், அங்கு நல்ல மண் இருப்பதைக் கண்டுள்ளார் பல்தசாரே. இன்னொரு பக்கம் அங்குள்ள வெயிலை அவரால் தாங்கமுடியவில்லை.

வெயில் தாங்க முடியாமல், தான் வசிப்பதற்கு நிலத்துக்கு அடியில் ஒரு அறையை உருவாக்கியுள்ளார். அத்துடன் நில்லாமல், தொடர்ந்து தோண்டி, நிலத்துக்கு அடியிலேயே எலுமிச்சை வகை மரங்களை வளர்த்திருகிறார் அவர்.

பகலெல்லாம் வேலைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியதும் தோட்ட வேலை செய்திருக்கிறார். அவர் எதிர்பார்த்ததுபோலவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு மரங்கள் பழங்களைக் கொடுக்க, வேலையை விட்டுவிட்டு, அவற்றை விற்கத் துவங்கியுள்ளார் பல்தசாரே.

அப்படி தொடங்கியது, 40 ஆண்டுகள் தொடர்ந்து பூமிக்கடியில் பள்ளம் தோண்டியிருக்கிறார். பெரிய பண்ணை, தனக்கொரு வீடு என பிரம்மாண்டமான கட்டிடங்களை பூமிக்கடியில் கட்டியிருக்கிறார் பல்தசாரே.

அவர் தொடர்ந்து பூமிக்கடியில் தோண்டிக்கொண்டே இருப்பதைப் பார்த்த உள்ளூர் மக்கள், அவர் ஒரு பெண் மீதான காதலால் அவதியுற்றுவருவதாக வதந்தி பரப்பியிருக்கிறார்கள்.

அடுத்தபடியாக பொதுமக்கள் வெயில் காலத்தில் தங்குவதற்காக பூமிக்கடியில் ரிசார்ட் ஒன்றை உருவாக்குவது என திட்டமிட்டுள்ளார் அவர். ஆனால், அது கட்டி முடிக்கப்படுவதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார்.

அவரது மறைவுக்குப் பின், அவரது சகோதரர் குடும்பம் அந்த இடத்தை தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளது. தற்போது, அந்த ரகசிய பண்ணை, வீடு முதலானவை மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...