வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்க நீதிமன்றமொன்றில் முதன்முறையாக முன்னிலையாகி, தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
நியூயோர்க் நகர நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணையின் போது, மதுரோ “நான் இப்போதும் வெனிசுலாவின் சட்டபூர்வமான ஜனாதிபதி” என நீதிமன்றில் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
அமெரிக்க அரசாங்கத்தினால் தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் (Narco-terrorism) மற்றும் இதர பாரதூரமான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக வெனிசுலா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவி வரும் அரசியல் மோதல்களின் உச்சக்கட்டமாக, மதுரோவை கைது செய்ய உதவுபவர்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே பல மில்லியன் டொலர் வெகுமதிகளை அறிவித்திருந்தது. இந்த நிலையில், அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகித் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.