tamilni 165 scaled
உலகம்செய்திகள்

தன்னுடைய கொலை வழக்கில் தானே ஆஜரான சிறுவனால் பரபரப்பு

Share

தன்னுடைய கொலை வழக்கில் தானே ஆஜரான சிறுவனால் பரபரப்பு

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் விசித்திரமான கொலை வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுவன் அபய் சிங்(வயது 11), இவரது தந்தை, சிறுவனின் தாத்தா மற்றும் மாமா மீது புகார் அளித்துள்ளார்.

இதனை வழக்காக பதிவுசெய்த பொலிசார், விசாரணையை தொடங்கினர், இதன்போது அலகாபாத் ஐகோர்ட்டில் நேரில் ஆஜரான சிறுவன் அபய் சிங், தான் இறக்கவில்லை என்றும், உயிருடன் இருப்பதாகவே வாக்குமூலம் அளித்தார்.

ஆனாலும் அது நிராகரிக்கப்பட்டது, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின் போதும் நேரில் ஆஜரானான்.

மேலும், தான் தாத்தா- பாட்டியுடன் வசித்து வருவதாகவும், பொலிசார் அடிக்கடி வந்து தொந்தரவு செய்வதாகவும் கூறியுள்ளான்.

இதனை கருத்தில் கொண்ட நீதிமன்றம், உத்தர பிரதேச அரசு, பிலிபித் போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் நியுரியா காவல் நிலைய உயரதிகாரி ஆகியோர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை சிறுவன் மற்றும் அவரது தாத்தா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பொலிசாரின் அடுத்த கட்ட விசாரணையில், வரதட்சணை கேட்டு அபயின் தாயை, கணவன் துன்புறுத்தி வந்ததும், 2013ம் ஆண்டு முதல் தாத்தா- பாட்டியின் அரவணைப்பில் அபய் இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் அபயின் தாய் மரணமடைந்த பின்னர், அபயின் தாத்தா அவரது தந்தை மீது புகார் அளித்துள்ளார்.

இதற்கு பழிக்குபழி வாங்குவதற்காகவே பொய் புகாரை கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...