1
உலகம்செய்திகள்

கணவருக்கு கத்திக்குத்து..!3 குழந்தைகளுடன் காரை ஏரிக்குள் பாய்ச்சிய மனைவி

Share

கணவருக்கு கத்திக்குத்து..!3 குழந்தைகளுடன் காரை ஏரிக்குள் பாய்ச்சிய மனைவி

தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் காரை ஏரி ஒன்றினுள் தாய் பாய்ச்சிய சம்பவம் அமெரிக்காவின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கர்ரோல்டன் பகுதியில் கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சென்று கொண்டு இருந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று திடீரென ஏரிக்குள் பாய்ந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

அப்போது, குடும்ப தகராறு காரணமாக மனைவி கணவரை கத்தியால் குத்திவிட்டு தன்னுடைய 8,9, மற்றும் 12 வயதுடைய 3 குழந்தைகளுடன் காரை ஏரிக்குள் பாய்ச்சியது தெரியவந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரையும் உடனடியாக மீட்க முடிந்தது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளில் ஒரு குழந்தை தீவிரமான சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், மற்ற 2 குழந்தைகளும் குணமடைந்து நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த கணவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மனைவியை பொலிஸார் கைது செய்து, வன்முறைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...