24 661308bba611b
உலகம்செய்திகள்

மனைவியை கொன்று உடலை 200 துண்டுகளாக வெட்டிய கணவன்

Share

மனைவியை கொன்று உடலை 200 துண்டுகளாக வெட்டிய கணவன்

பிரித்தானியாவில் லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து பின்னர் உடலை 200 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேர்ந்த நிக்கோலஸ் மெட்சன் என்ற நபரே தனத மனைவியான ஹோலி பிராம்லி (வயது 26) என்பவரை இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு திருமணமாகி 1 ½ ஆண்டுகள் ஆகின்றதோடு, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று நிக்கோலஸ் மெட்சன் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 200-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி சமையல் அறையில் உள்ள குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார்.

பின்னர் மனைவியின் உடல் பாகங்கள் இருந்த பிளாஸ்டிக் பைகளை ஆற்றில் வீசியுள்ளதோடு இதற்கு அவரது நண்பன் ஒருவர் உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆற்றில் மிதந்த ஹோலி பிராம்லியின் தலை மற்றும் உடல் பாகங்களை கைப்பற்றிய பொலிஸார் நிக்கோலஸ் மெட்சனை கைது செய்துள்ளனர்.

இதன்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...