உலகம்செய்திகள்

மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல்

Share
மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல்
மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல்
Share

மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல்

பிரித்தானியர் ஒருவர், இரத்தப் புற்றுநோயால் அவதியுற்றுவந்த தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றியதற்காக சிறையிலடைக்கப்பட்டார்.

பிரித்தானியரான டேவிட் (David Hunter, 76), தன் மனைவியான ஜேனிஸ் (Janice Hunter, 74)உடன் சைப்ரஸ் நாட்டில் வாழ்ந்துவந்தார். தம்பதியருக்கு திருமணமாகி 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், ஜேனிஸ் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

கடுமையான வலியால் அவதியுற்றுவந்த ஜேனிஸ் தன் கணவரிடம் கோரிக்கை ஒன்றைவைத்தார். அது, தன் கணவரே தன் மூச்சை நிறுத்திவிடவேண்டும் என்பதே.

காதல் மனைவி படும் கஷ்டத்தை சகிக்க முடியாத டேவிட், மனைவியின் மூக்கையும் வாயையும் மூடி, அவரது மூச்சை நிறுத்திவிட்டார்.

இது நடந்தது, 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம்.

டேவிடுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சைப்ரஸ் நாட்டில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், நேற்று டேவிட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 19 மாதங்கள் அவர் ஏற்கனவே சிறையில் செலவிட்டுவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எவ்வளவு நேசித்தார்கள் என்பதும், மனைவியின் வேதனையைக் கண்டதாலேயே அவரது மூச்சை நிறுத்த டேவிட் சம்மதித்ததாகவும் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மனைவி உயிரிழந்ததும், டேவிடும் அதிக அளவில் மாத்திரைகளை எடுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றிருந்தார். ஆனால், அவசர மருத்துவ உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...