மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல்
உலகம்செய்திகள்

மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல்

Share

மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல்

பிரித்தானியர் ஒருவர், இரத்தப் புற்றுநோயால் அவதியுற்றுவந்த தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றியதற்காக சிறையிலடைக்கப்பட்டார்.

பிரித்தானியரான டேவிட் (David Hunter, 76), தன் மனைவியான ஜேனிஸ் (Janice Hunter, 74)உடன் சைப்ரஸ் நாட்டில் வாழ்ந்துவந்தார். தம்பதியருக்கு திருமணமாகி 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், ஜேனிஸ் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

கடுமையான வலியால் அவதியுற்றுவந்த ஜேனிஸ் தன் கணவரிடம் கோரிக்கை ஒன்றைவைத்தார். அது, தன் கணவரே தன் மூச்சை நிறுத்திவிடவேண்டும் என்பதே.

காதல் மனைவி படும் கஷ்டத்தை சகிக்க முடியாத டேவிட், மனைவியின் மூக்கையும் வாயையும் மூடி, அவரது மூச்சை நிறுத்திவிட்டார்.

இது நடந்தது, 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம்.

டேவிடுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சைப்ரஸ் நாட்டில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், நேற்று டேவிட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 19 மாதங்கள் அவர் ஏற்கனவே சிறையில் செலவிட்டுவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எவ்வளவு நேசித்தார்கள் என்பதும், மனைவியின் வேதனையைக் கண்டதாலேயே அவரது மூச்சை நிறுத்த டேவிட் சம்மதித்ததாகவும் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மனைவி உயிரிழந்ததும், டேவிடும் அதிக அளவில் மாத்திரைகளை எடுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றிருந்தார். ஆனால், அவசர மருத்துவ உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...