சமையலில் 2 தக்காளி கூடுதலாக சேர்த்த கணவன்! வீட்டை விட்டு வெளியேறிய மனைவி
உலகம்செய்திகள்

சமையலில் 2 தக்காளி கூடுதலாக சேர்த்த கணவன்! வீட்டை விட்டு வெளியேறிய மனைவி

Share

சமையலில் 2 தக்காளி கூடுதலாக சேர்த்த கணவன்! வீட்டை விட்டு வெளியேறிய மனைவி

மத்திய பிரதேசத்தில் கணவர் ஒருவர் தான் சமைத்த உணவில் இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், அவரது மனைவி ஆத்திரமடைந்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து உயரும் தக்காளியின் விலை
நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பாமர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் ஒருபடி மேலே சென்று தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார்.

தக்காளியின் அதிக விலைகள் நுகர்வோரை பாதிப்பது மட்டுமல்லாமல், உணவகங்கள், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் இந்த பல்துறை மூலப்பொருளை பெரிதும் நம்பியிருக்கும் பிற வணிகங்களுக்கும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோலில் சந்தீப் பர்மன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி பர்மன். சந்தீப் பர்மன் தான் சமைத்த உணவில் இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்து ஆர்த்தி பர்மன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உணவகம் வைத்திருக்கும் சந்தீப் பர்மன், தனது மனைவி ஆர்த்தி பர்மனைக் கண்டுபிடித்து தருமாறு காவல்துறையை அணுகினார்.

அப்போது அவர், “என் மனைவி ஆர்த்தி பர்மன் எனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி ஒரு பேருந்தில் ஏறினார். நான் அவர்களை மூன்று நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். மனைவியின் புகைப்படத்தையும் காவல்துறையிடம் கொடுத்தேன். ஆனால் அவர்களால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், நான் என் மனைவியிடம் கேட்காமல் உணவில் தக்காளி சேர்த்ததால் மனைவி வருத்தமடைந்ததார். அது குறித்து வாக்குவாதம் செய்தேன். நான் தக்காளி சேர்ப்பது என் மனைவிக்கு பிடிக்கவில்லை” என்று கூறினார்.

பின்பு சந்தீப் பர்மன், தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஷாஹ்டோலின் அலுவலக அதிகாரி சஞ்சய் ஜெய்ஸ்வால் “ஆர்த்தி தனது கணவருடன் வாக்குவாதத்திற்குப் பிறகு தனது வீட்டை விட்டு வெளியேறி, உமாரியாவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார். கணவன், மனைவி இருவரையும் பொலிசார் பேச வைத்துள்ளனர். அவர் விரைவில் திரும்புவார்” என்று கூறினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...

Bangladesh Politics 1 1760710849824 1760710864579
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கத்தின் புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் நேற்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு...

20d66a50 f8fa 11ef 8c03 7dfdbeeb2526.jpg
உலகம்

ட்ரம்பின் சமாதான யோசனை குறித்து செலென்ஸ்கி பதில்

யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துடன் தான் உடன்படுவதாகத்...

Anura Kumara Dissanayake
செய்திகள்இலங்கை

மக்களின் விருப்பத்திற்கு மாறான சட்டம் நிறைவேற்றப்படாது: ஜனாதிபதி அனுரகுமார உறுதி

சாதாரண குடிமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் பார்த்துக் கொள்வேன் என்று ஜனாதிபதி அனுரகுமார...