உலகம்செய்திகள்

ஜப்பானில் இரத்து செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விமானங்கள்

Share
16 14
Share

ஜப்பானில் இரத்து செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விமானங்கள்

ஜப்பானில் (Japan) மற்றொரு சூறாவளி அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான ஜப்பானிய விமானங்கள் மற்றும் தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி 280 உள்நாட்டு விமானங்கள் இன்று (16) இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் 191 உள்நாட்டு மற்றும் 26 சர்வதேச சேவைகளை இரத்து செய்துள்ளது.

மேலும், ஜப்பானின் புல்லட் தொடருந்து சேவையின் முக்கிய பகுதிகளும் இன்று இரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த சூறாவளி தொலைதூர பசுபிக் தீவான சிச்சிஜிமாவிலிருந்து 300 கிலோமீட்டர் (190 மைல்) தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவின் கெமர் மொழியில் புளி என்று பொருள்படும் அம்பில் என்ற பெயர் கொண்ட இந்த சூறாவளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசுபிக் பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிழக்குப் பகுதிகளில் கடுமையான காற்று, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என ஜப்பானின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...