15 13
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தி தேசிய மொழி அல்ல.., கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சுக்கு அதிர்ந்த அரங்கம்

Share

இந்தி தேசிய மொழி இல்லை என்றும் அது அலுவல் மொழி மட்டும் தான் என்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சாதனைகளை புரிந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லூரியின் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அஸ்வின் கலந்து கொண்டார்.

அப்போது, மாணவ மாணவியருக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ” தமிழ் ஓகே வா, ஆங்கிலம் ஓகே வா, ஹிந்தி ஓகே வா என மாணவர்களை நோக்கி கேட்ட போது தமிழுக்கு மட்டும் மாணவர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

அப்போது, மாணவர்கள் ஹிந்தி மொழிக்கு ஆதரவு தெரிவிக்காததால், ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என்று” கூறினார். இதனை கேட்ட மாணவர்கள் மீண்டும் சத்தத்தை எழுப்பினர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...