17 2
உலகம்செய்திகள்

இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி பலி

Share

இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி பலி

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக்குழு தளபதி கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹிஸ்புல்லா ஆயுதக்குழு ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பானது, அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், லெபனானின் ஜொலியா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டினை குறிவைத்து விமானப்படை தாக்குதல் நடத்தியது.

குறித்த தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களில் தளபதி தாலிப் அப்துல்லாவும் ஒருவர். இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா நடத்திய பதிலடி தாக்குதலில், இஸ்ரேலின் சில பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளதால், இருதரப்புகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...