நேபாளத்தில் கனமழை – இதுவரை 6 பேர் சாவு – இருவர் மாயம்

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் மாயமாகியுள்ளனர் என அந்நாட்டு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் மீண்டும் பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.

கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் மண்ணில் புதையுண்ட நிலையில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

nebalam e1630698586976

Exit mobile version