24 664e6448754a3
உலகம்செய்திகள்

கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான மகிழ்ச்சி தகவல்

Share

கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான மகிழ்ச்சி தகவல்

புலம்பெயர்தல் தொடர்பில் கனடாவின்(Canada) அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதன்முறையாக தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்காக கனடா அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க இருப்பதாக கனடா புலம்பெயர்தல் அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா என்ன செய்துவருகிறது என சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சில தகவல்களை கூறியுள்ளார்.

கனடாவுக்கு தேவைப்படும் திறன்மிகுப் பணியாளர்களை தக்கவைப்பது தொடர்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதே நேரத்தில், கனேடியர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான வேலைவாய்ப்புகளையும் பாதுகாப்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அடுத்த கட்ட நடவடிக்கையாக, முதன்முறையாக, கனடாவின் வருடாந்திர புலம்பெயர்தல் திட்டத்தில், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோரையும் இணைக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, திறன்மிகுப் பணியாளர்களான தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோரை, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றோராக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ள விடயம், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...