25 690332f7d691e
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

Share

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண நியமனத் திட்டம் (PNP) வழியாக 302 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான (PR) அழைப்புகளை அனுப்பியுள்ளது.
இந்த அழைப்பு, draw number 374 என அழைக்கப்படுகிறது.
இதில் குறைந்தபட்ச விரிவான தரவரிசை அமைப்பு (Comprehensive Ranking System) மதிப்பெண் 761-ஆக இருந்தது, இது கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியிலிருந்து 17 புள்ளிகள் குறைந்துள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும்
இந்த PNP திட்டம், கனடாவின் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்குத் தேவையான திறமையான தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் பணியாளர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
நிரந்தர குடியுரிமை பெறுபவர்கள், கனடாவில் வாழ வேலை செய்ய மற்றும் நிரந்தரமாக குடியிருப்பதற்கான உரிமையைப் பெறுவர்
CRS மதிப்பெண் விநியோக பட்டியலில், 451-500 மதிப்பெண் கொண்டவர்கள் 69,503 பேர் உள்ளனர். மொத்தமாக 248,253 பேர் Express Entry புலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள், புதிய விண்ணப்பங்கள் சேரும் போது மாறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு, கனடா அரசாங்கம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் புதிய குடியுரிமை திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
24 671f70baa30ee
உலகம்செய்திகள்

ஜேர்மனி பயண ஆலோசனை புதுப்பிப்பு: இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு எச்சரிக்கை!

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மன் புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கனடா, பிரான்ஸ்,...

download
செய்திகள்உலகம்

நூற்றாண்டு கால இரகசியம்: முதல் உலகப் போர் வீரர்களால் கடலில் வீசப்பட்ட கடிதம் ஆஸ்திரேலிய கடற்கரையில் மீட்பு

மேற்கு அவுஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் பகுதியில் உள்ள வார்டன் கடற்கரையில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் புதைந்திருந்த ஒரு...

pregnancy 2 2024 09 778bfd6d1c1bc7106948a179ec619652
இலங்கைசெய்திகள்

பெண்கள் 51.7% – 15 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கை குறைவு!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையில் பாலினப் பங்கீடு மற்றும்...

33 8 696x392 1
இலங்கைசெய்திகள்

பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தேசம்: அடிப்படை உரிமை மனு நாளை விசாரணைக்கு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களை, மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில்...