உலகம்செய்திகள்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு! தகராறில் விபரீதம்

Share
4 30 scaled
Share

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு! தகராறில் விபரீதம்

அமெரிக்காவின் மோர்கன் பல்கலைக்கழக விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் மோர்கன். இதன் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது, இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட தகராறில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார்.

மாணவர்கள் பலரும் அலறி ஓடிய நிலையில் 5 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்திற்கு விரைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் மேரிலாண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...