4 30 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு! தகராறில் விபரீதம்

Share

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு! தகராறில் விபரீதம்

அமெரிக்காவின் மோர்கன் பல்கலைக்கழக விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் மோர்கன். இதன் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது, இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட தகராறில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார்.

மாணவர்கள் பலரும் அலறி ஓடிய நிலையில் 5 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்திற்கு விரைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் மேரிலாண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...