12 6
உலகம்செய்திகள்

ஏழு நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்ட நபர் : முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை

Share

ஏழு நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்ட நபர் : முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை

உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு உலக அதிசயங்களை எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மக்டி ஈசா (Magdy Eissa) என்பவரே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் இந்த சாதனை பயணத்தை 6 நாட்கள் 11 மணி நேரம் 52 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இந்த கின்னஸ் உலக சாதனைப் பயணத்தின் காணொளியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சீனப் பெருஞ்சுவருடன் தொடங்கிய இந்தப் பயணம், இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ரா, ரோமில் உள்ள கொலோசியம், பிரேசிலில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர், பெருவில் உள்ள மச்சு பிச்சு ஆகிய இடங்களைப் பார்வையிட்டுள்ளார்.

மேலும் இவர் அனைத்து இடங்களுக்கும் செல்ல பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

புதிய ஏழு அதிசயங்களைப் பார்வையிட்டு உலக சாதனையை முறியடிப்பதன் மூலம் தனது சிறுவயது கனவை நிறைவேற்றிகொண்டதாக ஈசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...