24 661daaf088cf2
உலகம்செய்திகள்

உலகின் மிக வயதான ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்

Share

உலகின் மிக வயதான ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த ஒட்டிபிறந்த இரட்டையர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ் 62வயதுடைய இரட்டையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 1961ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாக இருவரும் ஒட்டிபிறந்துள்ளனர்.

பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய இரத்த நாளங்கள் மற்றும் 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது உயிரிழந்துள்ளனர்.

இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்துள்ளமை சிறப்பம்சமாகும்

மேலும் கடந்த 2007ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனையை தனதாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் நிறுவனம் உட்பட உலக அமைப்புகள் பலவும், இரங்கல் தெரிவித்து வருகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...