உலகம்செய்திகள்

உலகின் மிக வயதான ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்

Share
24 661daaf088cf2
Share

உலகின் மிக வயதான ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த ஒட்டிபிறந்த இரட்டையர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ் 62வயதுடைய இரட்டையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 1961ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாக இருவரும் ஒட்டிபிறந்துள்ளனர்.

பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய இரத்த நாளங்கள் மற்றும் 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது உயிரிழந்துள்ளனர்.

இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்துள்ளமை சிறப்பம்சமாகும்

மேலும் கடந்த 2007ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனையை தனதாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் நிறுவனம் உட்பட உலக அமைப்புகள் பலவும், இரங்கல் தெரிவித்து வருகின்றன.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...