உலகம்செய்திகள்

கனவை நிறைவேற்ற 4,000 கி.மீ மிதி வண்டியில் பயணித்த நபர்

Share

கனவை நிறைவேற்ற 4,000 கி.மீ மிதி வண்டியில் பயணித்த நபர்

கினியாவை சேர்ந்த நபர், எகிப்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் சேர, மேற்கு ஆப்பிரிக்காவில் பல நாடுகள் ஊடாக 4,000 கி.மீ மிதி வண்டியில் பயணித்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவை சேர்ந்தவர் 25 வயதான மமதோ சஃபாயு பாரி. இவருக்கு எகிப்தின் புகழ்பெற்ற Al Azhar பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்பது கனவாக இருந்தது.

AD 970ல் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகமானது உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் சேரும் பொருட்டு கடந்த மே மாதம் மிதி வண்டியில் பாரி பயணத்தை துவங்கியுள்ளார்.

தன்னால் அந்த பல்கலைக்கழகத்தில் சேர முடியாது என்பதை அறிந்திருந்தும், நான்கு மாத பயணத்தை ஒரு மிதி வண்டியில் தொடங்கியதாக பாரி குறிப்பிட்டுள்ளார். பயணத்தின் நடுவே மாலி, புர்கினா பாசோ, நைஜர், டோகோ, பெனின் மற்றும் சாட் உள்ளிட்ட அரசியல் இறுக்கம் மிகுந்த நாடுகளை கடந்ததாகவும் பாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடுகளில் பாதுகாப்பின்மை மிகுந்து காணப்பட்ட தருணத்தில் தாம் பயணித்ததாக பாரி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இரண்டு முறை புர்கினா பாசோவிலும் ஒரு முறை டோகோவிலும் கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

சாட் பகுதியை அடைந்த போதே, தமக்கு ஊடக வெளிச்சம் கிடைத்ததாகவும், அதன் பின்னர் உதவிகள் குவிந்ததாகவும் பாரி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மக்கள் நிதி திரட்டி, எகிப்துக்கு விமான பயணம் ஏற்பாடு செய்து அளித்ததாகவும், இதனால் சூடானில் பயணப்படும் இக்கட்டான நிலை தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

செப்டம்பர் 5ம் திகதி Al Azhar பல்கலைக்கழகம் சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு தாம் விரும்பிய இஸ்லாமிய படிப்பில் சேர அனுமதி கிடைத்துள்ளதுடன், கல்விக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

கினியாவில் இருந்து சாட் வரையில் 6 நாடுகள் ஊடாக பாரி மிதி வண்டியிலேயே பயணித்துள்ளார். அங்கிருந்தே எகிப்துக்கு விமானத்தில் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....