3 15 scaled
உலகம்செய்திகள்

23 நாள்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு க்ரீன் சிக்னல்

Share

23 நாள்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு க்ரீன் சிக்னல்

இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திராவில், கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார். இவருடைய பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சில ஆண்டுகளாக இதற்கான விசாரணையை சி.ஐ.டி நடத்தி வந்த நிலையில் செப்டம்பர் 9 -ம் திகதி சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பின்பு, விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து, சந்திரபாபு நாயுடுவை வீட்டு சிறையில் அடைக்க கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அவரது ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் கோரிய வழக்கில் 4 வார காலம் நிபந்தனை ஜாமின் அளித்து ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...