3 15 scaled
உலகம்செய்திகள்

23 நாள்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு க்ரீன் சிக்னல்

Share

23 நாள்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு க்ரீன் சிக்னல்

இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திராவில், கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார். இவருடைய பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சில ஆண்டுகளாக இதற்கான விசாரணையை சி.ஐ.டி நடத்தி வந்த நிலையில் செப்டம்பர் 9 -ம் திகதி சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பின்பு, விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து, சந்திரபாபு நாயுடுவை வீட்டு சிறையில் அடைக்க கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அவரது ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் கோரிய வழக்கில் 4 வார காலம் நிபந்தனை ஜாமின் அளித்து ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...