rtjy 92 scaled
உலகம்செய்திகள்

பிரபல நடிகர் மீது பல பெண்கள் அத்துமீறல் குற்றச்சாட்டு: கனடா அதிரடி

Share

பிரபல நடிகர் மீது பல பெண்கள் அத்துமீறல் குற்றச்சாட்டு: கனடா அதிரடி

பிரபல பிரெஞ்சு நடிகர் ஒருவர் மீது பல பெண்கள் புகாரளித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், கனேடிய மாகாணம் ஒன்று அவருக்கு வழங்கிய உயரிய விருதொன்றை அதிரடியாக திரும்பப் பெற்றுள்ளது.

பிரபல பிரெஞ்சு நடிகரான Gérard Depardieu தங்களிடம் தவறாக நடந்துகொடதாக, நடிகைகள் உட்பட 13 பெண்கள் புகாரளித்துள்ளார்கள். அவற்றில் சில வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், Gérardஆல் பாதிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவரான Emmanuelle Debever என்னும் பெண், ஒரு வாரம் முன்பு பாரீஸிலுள்ள நதி ஒன்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

Emmanuelle தற்கொலை செய்துகொண்ட அதே நாளில், பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றில் ஆவணப்படம் ஒன்று வெளியானது. அது, Gérard மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையுடன் தொடர்புடைய ஆவணப்படமாகும்.

அந்த படத்தில், வடகொரியாவுக்குக் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்த Gérard, பெண்கள் முன்பாகவே ஆபாசமாக ஒலி எழுப்பியதுடன், 10 வயது சிறுமி உட்பட குதிரை ஓட்டும் பெண்களைக் குறித்து மோசமாக விமர்சித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளதுடன், புகைப்படம் எடுக்கும்போதே, தான் தன் அருகே நிற்கும் ஒரு வடகொரிய பெண்ணின் பின்பக்கங்களைத் தொட்டுக்கொண்டிருப்பதாகவும் Gérard கூற, அதுவும் அதே வீடியோவில் பதிவானது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டுவருகிறது.

அந்த ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து, கனடாவின் கியூபெக் மாகாண பிரீமியரான François Legault, நடிகர் Gérardக்கு கியூபெக் மாகாணத்தால் வழங்கப்பட்ட உயரிய விருதான Ordre national du Québec என்னும் விருதைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

பெண்களை மோசமாக விமர்சிக்கும் Gérard, அந்த கௌரவம் மிக்க விருதுக்கு தகுதியானவரல்ல என்று கூறியுள்ள François Legault அலுவலகம், அவரது நைட் பட்டத்தைப் பறித்துள்ளது.

இந்த முடிவு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டு கியூபெக் மாகாண பிரீமியராக இருந்த Bernard Landry எபவரால் நடிகர் Gérardக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது. கியூபெக்கில் இப்படி அந்த பட்டம் பறிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...