உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (09) மீண்டும் ஒரு பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதற்கமைய, இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் போது ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,029 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. சர்வதேச ரீதியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றது.
தங்கத்தை மாத்திரமன்றி, வெள்ளியின் விலையிலும் இன்று குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 80 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றத்தின் நேரடித் தாக்கம் இலங்கையின் உள்ளூர் சந்தையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இலங்கையில் இன்றைய தினம் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் கணிசமான மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.