23 6506f04461c67 1
உலகம்செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து கிம் ஜோங் உன் பெற்றுக்கொண்ட பரிசுகள்

Share

ரஷ்யாவிடம் இருந்து கிம் ஜோங் உன் பெற்றுக்கொண்ட பரிசுகள்

ரஷ்யாவில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கிம் ஜோங் உன், நாடு திரும்பியுள்ள நிலையில், அவருக்கு ரஷ்யா அளித்த பரிசுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஒருவார கால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். அவரது திடீர் ரஷ்ய பயணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருந்தது.

அவர் உக்ரைனுக்கு எதிராக ஆயுதங்களை ரஷ்யாவில் குவிக்க இருக்கிறார், இனி இரு தலைவர்களும் சேர்ந்து மேற்கத்திய நாடுகளின் அமைதியை குலைப்பார்கள், ஆயுதங்களுக்கு பதிலாக ரஷ்யா தானியங்களை வடகொரியாவுக்கு வழங்கும் என பட்டியல் நீண்டது.

ஆனால் இவை அனைத்தும் மேற்கத்திய ஊடகங்களின் கற்பனையே என சில அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் வடகொரியாவிலும் ரஷ்யாவிலும், இதுபோன்ற தகவல்களை கசியவிட உளவாளிகள் எவரையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதுவரை முயற்சிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் முதல் வெளிநாட்டு பயணம் இது. சனிக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த கிம் ஜோங், அவருடன் hypersonic ஏவுகணை அமைப்பு உட்பட ஆபத்தான ஆயுதங்கள் பலவற்றையும் பார்வையிட்டுள்ளார்.

இந்த நிலையில் தான் ரஷ்யாவின் மாகாண ஆளுநர் ஒருவர், வடகொரியாவுக்கு என kamikaze ட்ரோன்கள் ஐந்தும் Geran-25 ட்ரோன் ஒன்றும் பரிசளித்துள்ளதாகவும், அத்துடன் அதிநவீன குண்டு துளைக்காத உடைகள் சிலவற்றையும் பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையில், குவிக்கப்பட்டிருக்கும் வடகொரிய ஆயுதங்கள் மீது ரஷ்யாவுக்கு ஆசை இருப்பது உண்மை தான் கூறப்படுகிறது. ஆனால் தங்கள் ஏவுகணை திட்டத்தில் ரஷ்யா உதவ வேண்டும் என வடகொரியா எதிர்பார்ப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...