23 6506f04461c67 1
உலகம்செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து கிம் ஜோங் உன் பெற்றுக்கொண்ட பரிசுகள்

Share

ரஷ்யாவிடம் இருந்து கிம் ஜோங் உன் பெற்றுக்கொண்ட பரிசுகள்

ரஷ்யாவில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கிம் ஜோங் உன், நாடு திரும்பியுள்ள நிலையில், அவருக்கு ரஷ்யா அளித்த பரிசுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஒருவார கால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். அவரது திடீர் ரஷ்ய பயணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருந்தது.

அவர் உக்ரைனுக்கு எதிராக ஆயுதங்களை ரஷ்யாவில் குவிக்க இருக்கிறார், இனி இரு தலைவர்களும் சேர்ந்து மேற்கத்திய நாடுகளின் அமைதியை குலைப்பார்கள், ஆயுதங்களுக்கு பதிலாக ரஷ்யா தானியங்களை வடகொரியாவுக்கு வழங்கும் என பட்டியல் நீண்டது.

ஆனால் இவை அனைத்தும் மேற்கத்திய ஊடகங்களின் கற்பனையே என சில அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் வடகொரியாவிலும் ரஷ்யாவிலும், இதுபோன்ற தகவல்களை கசியவிட உளவாளிகள் எவரையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதுவரை முயற்சிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் முதல் வெளிநாட்டு பயணம் இது. சனிக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த கிம் ஜோங், அவருடன் hypersonic ஏவுகணை அமைப்பு உட்பட ஆபத்தான ஆயுதங்கள் பலவற்றையும் பார்வையிட்டுள்ளார்.

இந்த நிலையில் தான் ரஷ்யாவின் மாகாண ஆளுநர் ஒருவர், வடகொரியாவுக்கு என kamikaze ட்ரோன்கள் ஐந்தும் Geran-25 ட்ரோன் ஒன்றும் பரிசளித்துள்ளதாகவும், அத்துடன் அதிநவீன குண்டு துளைக்காத உடைகள் சிலவற்றையும் பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையில், குவிக்கப்பட்டிருக்கும் வடகொரிய ஆயுதங்கள் மீது ரஷ்யாவுக்கு ஆசை இருப்பது உண்மை தான் கூறப்படுகிறது. ஆனால் தங்கள் ஏவுகணை திட்டத்தில் ரஷ்யா உதவ வேண்டும் என வடகொரியா எதிர்பார்ப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...