23 6506f04461c67 1
உலகம்செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து கிம் ஜோங் உன் பெற்றுக்கொண்ட பரிசுகள்

Share

ரஷ்யாவிடம் இருந்து கிம் ஜோங் உன் பெற்றுக்கொண்ட பரிசுகள்

ரஷ்யாவில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கிம் ஜோங் உன், நாடு திரும்பியுள்ள நிலையில், அவருக்கு ரஷ்யா அளித்த பரிசுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஒருவார கால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். அவரது திடீர் ரஷ்ய பயணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருந்தது.

அவர் உக்ரைனுக்கு எதிராக ஆயுதங்களை ரஷ்யாவில் குவிக்க இருக்கிறார், இனி இரு தலைவர்களும் சேர்ந்து மேற்கத்திய நாடுகளின் அமைதியை குலைப்பார்கள், ஆயுதங்களுக்கு பதிலாக ரஷ்யா தானியங்களை வடகொரியாவுக்கு வழங்கும் என பட்டியல் நீண்டது.

ஆனால் இவை அனைத்தும் மேற்கத்திய ஊடகங்களின் கற்பனையே என சில அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் வடகொரியாவிலும் ரஷ்யாவிலும், இதுபோன்ற தகவல்களை கசியவிட உளவாளிகள் எவரையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதுவரை முயற்சிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் முதல் வெளிநாட்டு பயணம் இது. சனிக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த கிம் ஜோங், அவருடன் hypersonic ஏவுகணை அமைப்பு உட்பட ஆபத்தான ஆயுதங்கள் பலவற்றையும் பார்வையிட்டுள்ளார்.

இந்த நிலையில் தான் ரஷ்யாவின் மாகாண ஆளுநர் ஒருவர், வடகொரியாவுக்கு என kamikaze ட்ரோன்கள் ஐந்தும் Geran-25 ட்ரோன் ஒன்றும் பரிசளித்துள்ளதாகவும், அத்துடன் அதிநவீன குண்டு துளைக்காத உடைகள் சிலவற்றையும் பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையில், குவிக்கப்பட்டிருக்கும் வடகொரிய ஆயுதங்கள் மீது ரஷ்யாவுக்கு ஆசை இருப்பது உண்மை தான் கூறப்படுகிறது. ஆனால் தங்கள் ஏவுகணை திட்டத்தில் ரஷ்யா உதவ வேண்டும் என வடகொரியா எதிர்பார்ப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...