tamilni 160 scaled
உலகம்செய்திகள்

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு! உள்ளிருக்கும் தங்க சுரங்கங்கள்

Share

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு! உள்ளிருக்கும் தங்க சுரங்கங்கள்

இந்தப் பூமியில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களாகிய நாங்கள் பூமியின் மையத்தில் உள்ள நாடு எது? அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கிறது? இந்த வினாக்களுக்கான விடைகளை தேடிக்கொண்டிருக்கின்றோம்.

விஞ்ஞானத்தின்படி பூமியின் உச்ச மையத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. அதற்கு மிக அருகில் உள்ள நகரம் கானாவின் தகோராடி ஆகும்.

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானா ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. வானியலாளர்களின் கூற்றுப்படி, கானா நாடு பூமியின் மையத்திலிருந்து 380 மைல் தொலைவில் உள்ளது. அதனால்தான் இந்த இடத்தை பூமியின் அடையாளமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள இந்த கானா நாட்டின் வரலாறு மிகவும் மர்மமானது. நடுவில் இருப்பதால், இங்குள்ள வளிமண்டலம் முற்றிலும் வேறுபட்டது.

உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​இங்கு அதிக வெப்பம் நிலவுவதுடன் மே, ஜூன் ஆகிய மாதங்களில் அதிக வெப்பம் நிலவுவதால், வெளியில் சென்றால் தீயில் எரியும் அளவிற்கு வானிலை நிலவுவதாக தெரிகிறது.

ஒரு காலத்தில் கானா நாடு மிகவும் வளமான நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு தங்கச் சுரங்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் விநியோகிக்கக்கூடிய அளவுக்கு இங்கு தங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த தங்கச் சுரங்கங்களைப் பிடிக்க போர்த்துக்கேயர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே பல போர்கள் நடந்ததாகவும் வரலாறு உண்டு.

மேலும், கானா மக்களின் வாழ்க்கை முறை மிகவும் சுவாரஸ்யமானது. அங்கு பலர் வண்ணமயமான ஆடைகளில் காணப்படுவார்கள்.

கானா, மனிதனால் உருவாக்கப்பட்ட வோல்டா ஏரியின் தாயகமாகும். வோல்டா ஏரி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரி ஆகும். கொள்ளளவு அடிப்படையில், இது உலகில் நான்காவது மிகப்பெரிய ஏரியாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர், நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்த ஏரி முதன்மையாக உருவாக்கப்பட்டது.

தற்போது, 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கானா, மேற்கு ஆபிரிக்காவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...