உலகம்செய்திகள்

கடும் பணியாளர் தட்டுப்பாடு: ஜேர்மன் நிறுவனம் எடுத்துள்ள முடிவு

Share

கடும் பணியாளர் தட்டுப்பாடு: ஜேர்மன் நிறுவனம் எடுத்துள்ள முடிவு

பணியாளர் பற்றாக்குறை காரணமாக, ஜேர்மன் நிறுவனம் ஒன்று, பணி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு வரவழைத்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. பணி ஓய்வு பெறும் வயது வந்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.

ஆனால், அவர்களுடைய இடத்தை நிரப்ப புதிதாக, தகுதியுடைய இளைஞர்கள் இல்லை.

ஜேர்மன் நிறுவனமான Lufthansa Technikக்கு டிசம்பர் மாதம் வாக்கில், சுமார் 2,000 திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆனால், அந்த இடத்தை நிரப்ப ஆட்கள் இல்லை என்பதுடன், அப்படி புதிதாக பணிக்கு எடுப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட பணிகளில் அனுபவமும் இல்லை.

ஆகவே, குறிப்பிட்ட அளவிலான பணியிடங்களையாவது நிரப்புவதற்காக, பணி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அழைத்துள்ளது Lufthansa Technik நிறுவனம்.

விடயம் என்னவென்றால், இப்படி பணி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவதால், நிறுவனத்துக்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் கிடைக்கும் அதே நேரத்தில், இப்படி ஓய்வு பெற்ற பின் பணிக்குத் திரும்புபவர்களுக்கு, ஓய்வூதியத்துடன் கூடுதல் வருவாயும் கிடைக்கிறது என்பதால், பணியாளர்களுக்கும் லாபம், நிறுவனத்துக்கும் லாபம் என்னும் நிலை காணப்படுகிறது.

ஆனால், எவ்வளவு காலத்துக்கு இதே நிலை நீடிக்கமுடியும் என்பது கேள்விக்குறிதான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....