28 3
உலகம்செய்திகள்

தடையை மீறி மறைமுகமாக ரஷ்ய எரிவாயுவை வாங்கும் ஜேர்மனி

Share

தடை செய்யப்பட்ட ரஷ்ய பெட்ரோலில் இயங்கும் கனேடிய வாகனங்கள், இது எப்படி சாத்தியம் என்னும் ஒரு செய்தியை நீங்கள் சமீபத்தில் படித்திருக்கலாம்.

ஆம், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது.

ஆனால், கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தாலும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யாவிடமிருந்து திரவ இயற்கை எரிவாயுவை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில், பல மில்லியன் டொலர்கள் மதிப்புடைய, தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய் கனடாவில் புழங்குவதாக ஒரு செய்தி வெளியானது.

அதாவது, ரஷ்யாவின் கச்சா எண்ணெய், இந்தியா துருக்கி போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதற்கு தடையும் கிடையாது. ஆகவே, அந்த எரிபொருட்களை வாங்குவது ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடையை மீறும் செயலும் அல்ல என்பதால், ரஷ்ய எண்ணெய் மறைமுகமாக கனடாவுக்குள் நுழைகிறது.

அதேபோல, ஜேர்மனியும், தடையை மீறி, மறைமுகமாக ரஷ்ய எரிவாயுவை வாங்குவதாக, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் உக்ரைனை மையமாகக் கொண்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதாவது, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளிலுள்ள சில நிறுவனங்கள் ரஷ்ய எரிவாயுவை வாங்குகின்றன.
அந்த நிறுவனங்களிடமிருந்து ஜேர்மனி பெருமளவில் எரிவாயுவை இறக்குமதி செய்கின்றது.

ஜேர்மன் அரசால் கட்டுப்படுத்தப்படும் ஆற்றல் நிறுவனம் ஒன்று, 2024ஆம் ஆண்டில் மட்டும், பிரான்சிலுள்ள ஒரு நிறுவனம் மூலமாக 58 டேங்கர் எரிவாயுவை வாங்கியுள்ளது.

இது, பிரான்ஸ் நிறுவனம் மூலம் 2023ஆம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து ஜேர்மனி வாங்கிய எரிவாயுவைவிட ஆறு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...