1 10 scaled
உலகம்செய்திகள்

பொருளாதார வீழ்ச்சியில் ஜேர்மனி- அரசாங்கம் விடுத்த மகிழ்ச்சி அறிவிப்பு

Share

பொருளாதார வீழ்ச்சியில் ஜேர்மனி- அரசாங்கம் விடுத்த மகிழ்ச்சி அறிவிப்பு

ஜேர்மன் அந்நாட்டு ஊழியர்களின் வேலை நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளது.

ஜேர்மனி பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து வருவதால் அந்நாட்டு ஊழியர்களின் மத்தியில் ஒரு புதிய சோதனையை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருகின்ற ஆறு மாதங்களுக்கு ஊழியர்களின் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்களாக குறைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனால் ஊழியர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியம் மேம்படும் எனவும் வினைத்திறன் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டமானது நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என பல தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆரம்பக்கட்ட சோதனையாக அந்நாட்டின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

மேலும் இத்திட்டம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தை கடைபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் கைது!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...