rtjy 72 scaled
உலகம்செய்திகள்

எல்லை கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் ஜேர்மனி

Share

எல்லை கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் ஜேர்மனி

செக் குடியரசு, போலந்து மற்றும் சுவிட்சர்லாந்துடனான எல்லைக் கட்டுப்பாடுகளை டிசம்பர் நடுப்பகுதி வரை நீட்டிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக பெடரல் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

முதலில் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அக்டோபர் மாத இறுதிவரை 20 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன.

மேலும், நவம்பரில் எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அறிவித்த நிலையில் நவம்பர் மாதம் 13ஆம் திகதி ஜேர்மனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஒழுங்கற்ற புலம்பெயர்தலையும், ஆட்கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக எல்லைக்கட்டுப்பாடுகளை ஜேர்மனி பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜேர்மனிக்குள் நுழையும் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது.

சக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ஆஸ்திரியாவின் எல்லையில் ஜேர்மனி 2015 முதல் எல்லை சோதனைகளை மேற்கொண்டதோடு அக்டோபரில் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 9,200 அங்கீகரிக்கப்படாத உள்ளீடுகள் கண்டறியப்பட்டதாகவும் மேலும் 4,370 தடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...