25 67c712a0b3ef1 md
உலகம்செய்திகள்

ரஷ்ய அச்சுறுத்தலைச் சமாளிக்க: ஜேர்மனியில் மீண்டும் கட்டாய இராணுவ சேவைச் சட்டம் நிறைவேற்றம்!

Share

ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காகத் தங்கள் இராணுவ பலத்தைப் பெருக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஜேர்மன் (ஜெர்மனி) அரசாங்கம் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அமுல்படுத்தும் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை இராணுவச் சேவையில் இணைக்க ஜேர்மன் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தச் சேவை ஆண்களுக்குக் கட்டாயமாகவும், பெண்களுக்குத் தன்னார்வ அடிப்படையிலும் இருக்கும்.

போர் ஏற்படும் காலங்களில் இவர்கள் இராணுவச் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டில் மேலும் 20 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் ஏற்கனவே இருந்த கட்டாய இராணுவ சேவை, முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆட்சியில் 2011ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கட்டாய இராணுவ சேவைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...