9 2
உலகம்செய்திகள்

வேலை தேடுவோருக்கான புதிய விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ள ஜேர்மனி

Share

வேலை தேடுவோருக்கான புதிய விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ள ஜேர்மனி

ஜேர்மனி (Germany) புதிதாக அறிமுகப்படுத்திய German Opportunity Card (Chancenkarte) விசா திட்டத்தின் தகுதி அளவுகோல்கள் தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், இந்த விசா திட்டமானது திறமையான தொழிலாளர்களை (skilled workers) ஜேர்மனிக்கு வரவேற்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது புள்ளி அடிப்படையிலான (points-based) தேர்ச்சி முறையில் செயல்படும்.

இந்த Opportunity Card விசா முதல் கட்டமாக ஒரு வருடத்திற்கு வழங்கப்படும்.

அத்தோடு கல்வி, வேலை அனுபவம், மொழி திறன் மற்றும் வயது போன்ற காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

வேலையாட்கள் குறைவாக இருக்கும் தொழில்களில் அனுபவம் உள்ளவர்கள், முன்னதாக ஜேர்மனியில் வாழ்ந்த அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தகுதியான வாழ்க்கை துணையுடன் விண்ணப்பிக்கும் நபர்கள் கூடுதல் புள்ளிகளைப் பெறலாம்.

விண்ணப்பிக்க கல்வித் தகுதி, வேலை அனுபவ சான்றுகள், மொழித் தேர்ச்சி, நிதி ஆதாரம் மற்றும் மருத்துவ காப்பீட்டுச் சான்றுகள் தேவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, விண்ணப்பங்கள் ஜேர்மனி குடியேற்ற இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வெளிநாட்டு ஜேர்மன் தூதரகங்கள் சேவை கட்டணத்துடன் விண்ணப்பங்களை செயல்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம், திறன்மிகுதொழிலாளர்களுக்கு ஜேர்மனியில் வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்கான அமைப்புசார்ந்த வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...