tamilnaadi 146 scaled
உலகம்செய்திகள்

கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதியளித்த பிரபல ஐரோப்பிய நாடு

Share

கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதியளித்த பிரபல ஐரோப்பிய நாடு

கஞ்சா பயன்பாட்டுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்து ஜேர்மன் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதிய சட்டத்தின் அடிப்படையில், 18 வயதுக்கு மேற்பட்ட ஜேர்மானியர்கள் குறிப்பிட்ட அளவு கஞ்சாவை சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருக்கலாம். ஆனால் கடுமையான விதிகளால் கஞ்சா வாங்குவது எளிதல்ல என கூறப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் பொதுவெளியில் கஞ்சா பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. மேலும், 25 கிராம் வரையில் தனியொருவர் பொதுவெளியில் கஞ்சா வைத்திருக்கலாம்.

குடியிருப்பில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 50 கிராம் வரையில் வைத்திருக்கலாம். பெர்லின் நகரில் பொதுவாக கஞ்சா பயன்பாட்டை பொலிசார் கண்டும் காணாமல் விட்டு வந்தனர். பொதுவெளியில் பயன்பாடு சட்டவிரோதம் மட்டுமின்றி, வழக்கும் பதியப்படலாம்.

ஆனால் கடுமையான சட்டங்கள் அமுலில் இருந்தும் ஜேர்மனியில் கஞ்சா பயன்படுத்தும் இளையோரின் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது. இதனையடுத்து சட்டவிரோத விற்பனையை தடுக்கவும், போலியான கஞ்சாவால் மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து மீட்கவும்,

குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் கஞ்சா விற்பனையால் வருவாய் ஈட்டுவதை முடக்கவும் சுகாதார அமைச்சர் Karl Lauterbach முக்கிய முடிவெடுக்க வேண்டியிருந்தது.

இதனையடுத்தே கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கும் முடிவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற சில பகுதிகளில் கஞ்சா புகைப்பது சட்டவிரோதமானது.

மேலும் கஞ்சா வாங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக கஞ்சா செடி வளர்க்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு மூன்று மரிஜுவானா செடிகள் வரை வளர்க்கலாம்.

மட்டுமின்றி, அடுத்த சில ஆண்டுகளில், புதிய சட்டத்தின் தாக்கத்தை மதிப்பிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் உரிமம் பெற்ற கஞ்சா விற்பனையை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...