4 13 scaled
உலகம்செய்திகள்

1.3 பில்லியன் யூரோ மதிப்புள்ள புதிய இராணுவ ஆயுதங்கள்! அறிவிப்பை வெளியிட்ட ஜேர்மனி

Share

1.3 பில்லியன் யூரோ மதிப்புள்ள புதிய இராணுவ ஆயுதங்கள்! அறிவிப்பை வெளியிட்ட ஜேர்மனி

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவ ஜேர்மனி 1.3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள இராணுவ உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேச நாடுகளிடம் போருக்காக உதவி கேட்டு வருகிறார். மேலும் அவர் புடினை கொல்வதற்கான அனைத்து உரிமைகளும் தங்களுக்கு இருப்பதாக கூறிய பரபரப்பை ஏற்படுத்தினார்.

மோசமான நாடு என பெயர் வாங்கியுள்ள ஜேர்மனி: அதை மாற்ற அரசியல்வாதிகள் விடுத்துள்ள கோரிக்கை
மோசமான நாடு என பெயர் வாங்கியுள்ள ஜேர்மனி: அதை மாற்ற அரசியல்வாதிகள் விடுத்துள்ள கோரிக்கை
இந்த நிலையில் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜேர்மனின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் (Boris Pistorius) கூறுகையில், ‘உக்ரைனுக்கு 1.3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள மற்றொரு இராணுவ உதவிப் பொதியை (Military aid package) ஜேர்மனி வழங்கும், அதில் நான்கு கூடுதல் IRIS-T வான் பாதுகாப்புப் பிரிவுகளும் அடங்கும்.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான உங்கள் போராட்டத்தில் இது உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். உக்ரைனுடன் நாங்கள் நிலையான மற்றும் நம்பகத்தன்மையுடன் நிற்கிறோம் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இராணுவப் பொதியில் 20,000 பீரங்கி குண்டுகள் (155mm) மற்றும் டாங்கி எதிர்ப்பு மைன்ஸும் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீவிற்கு இதுவரை 8 IRIS-T அமைப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது, அவற்றில் மூன்று வழங்கப்பட்டுள்ளன. ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைன் முக்கியமாக அவற்றைப் பயன்படுத்துகிறது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...