rtjy 154 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

ஜேர்மனி இரட்டைக் குடியுரிமை தொடர்பில் மகிழ்ச்சி தகவல்

Share

ஜேர்மனி இரட்டைக் குடியுரிமை தொடர்பில் மகிழ்ச்சி தகவல்

ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஜேர்மன் பெடரல் கேபினட், கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்தி இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை மறுசீரமைப்பு சட்டத்தை அங்கீகரித்தது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், அதிக வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் பலர், குடியுரிமைச் சட்ட மாற்றம் தொடர்பிலான செய்திக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய குடியுரிமைத் திட்டங்களின் கீழ், கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கவேண்டுமானால், அவர்கள் எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மாற்றி, ஐந்து ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தால் போதும் என முடிவு செய்யப்பட உள்ளது.

ஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோரில் ஒருவராவது சட்டப்படி ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமாக வாழ்ந்திருக்கும் பட்சத்தில், அந்தக் குழந்தைகள் தானாகவே ஜேர்மன் குடிமக்களாக ஆகிவிடுவார்கள்.

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமைகள் வைத்திருக்க அனுமதியளிக்கப்பட உள்ளது.

மேலும், 67 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், ஜேர்மன் மொழித்தேர்வை எழுதுவதற்கு பதிலாக, அது அவர்களுக்கு வாய்மொழித்தேர்வாக மாற்றப்பட உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், தான் அதிக வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதைக் காண விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

போர்க்குற்ற விசாரணை! இலங்கைக்கான முக்கிய நிதி பங்களிப்பை நிறுத்த தயாராகும் அமெரிக்கா

இலங்கை, உள்ளிட்ட பல உலகநாடுகள் பலவற்றில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்குமென...

11 8
இலங்கைசெய்திகள்

செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்! தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி

இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய...

10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை...

8 8
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு

தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த...