உலகம்செய்திகள்

ஜேர்மனியில் மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு

19 11
Share

ஜேர்மன் நகரமொன்றில், மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் Saxony மாகாணத்திலுள்ள Dresden நகரில், பாலம் ஒன்றின் கட்டுமானப்பணி நடந்துவரும் நிலையில், நேற்று காலை வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அது, இரண்டாம் உலகப்போரின்போது பிரித்தானியா வீசிய குண்டுகளில் ஒன்று ஆகும்.

அந்த நகரில் வாழும் மக்களில் கிட்டத்தட்ட பாதிபேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதால், சுமார் 10,000 பேரின் வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மன் நகரங்கள் பலவற்றில், இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட குண்டுகள் கட்டுமானப்பணியின்போது தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன.

Dresden நகரில் 1945ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 4,000குண்டுகள் வீசப்பட்டன. அந்த தாக்குதலில் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது வீசப்பட்ட குண்டுகளில், வெடிக்காத பல குண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....