19 5
உலகம்செய்திகள்

நெருங்கும் தேர்தல்… அச்சத்தில் 90 சதவிகித ஜேர்மானிய மக்கள்: ஒரேயொரு காரணம்

Share

வெளிநாட்டு சக்திகளால் சமூக ஊடகங்கள் வழியாக நாடாளுமன்றத் தேர்தலில் செல்வாக்கு செலுத்த முடியும் என்ற அச்சத்தை 90 சதவிகித ஜேர்மானிய மக்கள் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இருந்து ஜேர்மானிய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுகின்றனர்.

Bitkom என்ற அமைப்பு கடந்த மாதம் 1000 வாக்காளர்களிடம் முன்னெடுத்த கருத்துக்கணிப்பில் 45 சதவிகிதம் பேர்கள் ரஷ்யாவால் தேர்தல் சீர்குலைய வாய்ப்புள்ளதாக பதிவு செய்துள்ளனர். ஆனால் அமெரிக்காவும் முயற்சிகள் செய்யலாம் என 42 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா 26 சதவிகிதம் என்றும் கிழக்கு ஐரோப்பா 8 சதவிகிதம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தகுதியுள்ள வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கு (69%) பேர்களுக்கு, பிப்ரவரி 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தல்கள் பற்றிய தகவல்களுக்கு இணையம் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.

ஆனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உரையாடல்கள் தொடர்ந்து மிகவும் முக்கியமானவை என 82 சதவிகிதம் பேர்கள் தெரிவித்துள்ளனர். 75 வயதுக்கு மேற்பட்ட 76 சதவிகிதம் மக்கள் செய்தி ஊடகங்களே காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

பதிலளித்தவர்களில் சுமார் 80 சதவிகிதம் பேர் புதிய அரசாங்கம் டிஜிட்டல் கொள்கையை அதன் முன்னுரிமைகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

மட்டுமின்றி, 71 சதவிகிதம் பேர்கள் புதிய, சுதந்திரமான டிஜிட்டல் அமைச்சகத்தை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டவரும் உலகின் பெரும் கோடீஸ்வரருமான எலோன் மஸ்க் ஜேர்மன் தீவிர வலதுசாரி கட்சிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...