உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பெண்கள் உட்பட புகலிடக்கோரிக்கையாளர்கள் 5 பேர் கைது

Share

ஜேர்மனியில் பெண்கள் உட்பட புகலிடக்கோரிக்கையாளர்கள் 5 பேர் கைது

ஜேர்மனிக்குள் புலம்பெயர்ந்தோர் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சிரியா நாட்டவர்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.

அவர்களை நாட்டிற்குள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பில் பொலிசார் ரெய்டுகள் நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அவர்கள் அனைவரும் சிரியர்கள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் என்று கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர்.

ஜேர்மனிக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக அந்த புலம்பெயர்ந்தோர் கடத்தல்காரர்களுக்கு, ஆளுக்கு 3,000 முதல் 7,000 யூரோக்கள் வரை செலுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் அந்த புலம்பெயர்ந்தோர் கொடுத்த பணத்தில் தங்கம் வாங்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...