உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பெண்கள் உட்பட புகலிடக்கோரிக்கையாளர்கள் 5 பேர் கைது

Share

ஜேர்மனியில் பெண்கள் உட்பட புகலிடக்கோரிக்கையாளர்கள் 5 பேர் கைது

ஜேர்மனிக்குள் புலம்பெயர்ந்தோர் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சிரியா நாட்டவர்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.

அவர்களை நாட்டிற்குள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பில் பொலிசார் ரெய்டுகள் நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அவர்கள் அனைவரும் சிரியர்கள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் என்று கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர்.

ஜேர்மனிக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக அந்த புலம்பெயர்ந்தோர் கடத்தல்காரர்களுக்கு, ஆளுக்கு 3,000 முதல் 7,000 யூரோக்கள் வரை செலுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் அந்த புலம்பெயர்ந்தோர் கொடுத்த பணத்தில் தங்கம் வாங்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...