2 6 scaled
உலகம்செய்திகள்

படுமோசமான நீரை பருகும் காசா மக்கள்! பகீர் உண்மைகள்

Share

படுமோசமான நீரை பருகும் காசா மக்கள்! பகீர் உண்மைகள்

ஸ்ரேலுக்கு எதிரான சண்டைக்கு இடையில், காசா பகுதி குறித்த தகவல்களை அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளன. எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காசா எனும் சிறிய பகுதியை, 1967ஆம் ஆண்டு நடந்த போரில் வென்ற இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

இஸ்ரேல்-எகிப்து மற்றும் மத்திய தரைக்கடலை எல்லைகளாகக் கொண்ட காசா 38 ஆண்டுகள் இஸ்ரேலின் கீழ் இருந்தது.

அதன் பின்னர் சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டில் இஸ்ரேல் தனது மக்கள் மற்றும் ராணுவம் என 9,000 பேரை காசாவில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து பாலஸ்தீனிய ஆளுகையின் கீழ் காசா வந்தது. இங்கு மொத்தம் 20 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள், ஆனால் காசாவின் மொத்த பரப்பளவு 140 சதுர மைல்கள் தான்.

இதன் காரணமாக உலகிலேயே மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதியாக காசா உள்ளது. 19 வயதுக்கு உட்பட்டவர்களே இங்கு பாதிக்கும் மேல் வசிக்கின்றனர்.

இங்குள்ள மக்கள் 96 சதவீதம் சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், உலக அளவில் வேலை இல்லாத மக்கள் இங்கு தான் அதிகமாம். அதாவது 45 சதவீத காசா மக்கள் வேலையின்றி இருக்கின்றனர்.

இதனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் 65 சதவீதம் பேர் உள்ளனர். காசாவில் 63 சதவீதம் பேர் உணவு பாதுகாப்பு அற்றவர்கள் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும், இங்கு 13 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருக்கும். விமான சேவையும் இங்கு இல்லை. ஏனென்றால் 2001ஆம் ஆண்டு விமான நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

காசாவில் வசிக்கும் மக்கள் தொடர் சண்டைகளால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...