tamilnih 45 scaled
உலகம்செய்திகள்

103 உறவுகளையும் ஒரே நாளில் இழந்த நபர்

Share

103 உறவுகளையும் ஒரே நாளில் இழந்த நபர்

காசா போரில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. சில சம்பவங்கள் நெஞ்சை உலுக்கும் சம்பவங்களாக இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு சம்பவமாக, ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த எதிர் தாக்குதலில் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 103 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

தாக்குதலின் போது, ​​அஹ்மத் அல் குஃபெரி (Ahmad al-Ghuferi) என்ற நபர் டெல் அவிவ் நகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். தாக்குதல் காரணமாக அவரால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.

ஆனால் டிசம்பர் 8-ஆம் திகதி காசா நகரில் நடந்த இஸ்ரேலின் எதிர் தாக்குதலில் அவர் தனது குடும்பத்தை இழந்தார். அந்த தாக்குதலில் அவர் சுமார் 103 உறவினர்களையும் இழந்ததாக தெரிகிறது.

இராணுவத்தினர் சாலைகளை மூடிய பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் மட்டுமே பேசினார். ஆனால் டிசம்பர் 8-ஆம் திகதி நடந்த தாக்குதலில் அவர் தனது மனைவி (ஷிரீன்) மற்றும் மூன்று மகள்களை இழந்தார்.

அந்த வெடிகுண்டு தாக்குதலில் அஹ்மதின் தாய், அவரது நான்கு சகோதரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்தனர்.

மேலும், அன்று நடந்த தாக்குதலில் அத்தைகள், மாமாக்கள், சகோதரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அகமது கூறினார். அதில் சிலரது சடலங்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

முதலில் ஒரு ஏவுகணை தனது வீட்டின் வாசலில் விழுந்ததாகவும், அதில் இருந்து தப்பிய தனது மனைவி மற்றும் குழந்தைகள் தனது மாமா வீட்டிற்கு ஓடியதாகவும், ஆனால் 15 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு போர் விமானம் வீட்டை வெடிக்கச் செய்ததாகவும் அவர் கூறினார்.

தாக்குதல்களின் போது வெளியே ஓடியவர்கள் உயிர் பிழைத்ததாகவும், வீட்டில் பதுங்கியிருந்தவர்கள் தாக்குதலில் நசுங்கி உயிரிழந்ததாகவும் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

10 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

அஹ்மத் குடும்பத்தினரின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 103 பேர் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அஹ்மத் அல் குஃபேரியின் தற்போதைய நிலை மனவேதனை அளிக்கிறது. அவர் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்தார்.

மனைவி, குழந்தைகள், தாய், மாமியார் மற்றும் சகோதரர்கள் அனைவரும் தாக்குதலில் இறந்தனர். அந்த சோகமான சம்பவத்தில் இருந்து அஹ்மத் மீண்டு வந்தாலும், அவரது மனக்குறைகளை தீர்க்க அவருக்கென யாரும் இல்லை. இன்றும் அங்கு குண்டுகளின் சத்தம் தொடர்கிறது.

எதிர்வரும் ரம்ஜான் மாதத்தில் போர் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதத்தை முன்னிட்டு அந்த நாட்களில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ரமலான் மாதத்தில் எந்த ஆயுதமும் பயன்படுத்தக்கூடாது என்று இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பைடன் கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...