அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யூனியன் சதுக்கத்திலுள்ளள 8 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கல சிலை அடையாளம் தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாசகார செயலை இந்திய தூதரகம் கடுமையாக கண்டிப்பதாக இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
காந்தி சிலை சேத சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை உடனடி விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி மெமோரியல் சர்வதேச அறக்கட்டளையால் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி எட்டடி உயரமுள்ள சிலை நன்கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews