24 662308fb62d55
உலகம்செய்திகள்

இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து அதிரடி முடிவு

Share

இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து அதிரடி முடிவு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களை தணிக்க G7 நாடுகள் உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மேற்குக் கரையில் வன்முறையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய தீவிரவாதிகளின் சார்பாக நிதி திரட்டும் இரண்டு அமைப்புகளின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியமும் “தீவிரவாத குடியேற்றக்காரர்களுக்கு” அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய நகரமான இஸ்பஹானில் உள்ள விமான நிலையம் மற்றும் இராணுவ தளத்திற்கு அருகில் இஸ்ரேல் நேற்று தாக்குதல் மேற்கொண்டிருந்தது.

ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா கூறியிருந்த நிலையில் இஸ்ரேல் தனது முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் என தெரிவித்த அடுத்த நாளே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் தமது நாடு மீது இஸ்ரேல் உண்மையில் தாக்குதல் நடத்தியதா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் இஸ்ரேல் மீது உடனடி தாக்குதல் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஈரானின் எல்லைப் பகுதியில் சிறிய வகை ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....