86038034
உலகம்செய்திகள்

2024ஆம் ஆண்டைக் குறித்த பிரான்ஸ் ஜோதிட நிபுணரின் கணிப்புகள்

Share

பிரான்சில் பிறந்தவரான ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் Les Propheties. 1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என 942 விடயங்கள் குறித்து கணித்து எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ்.

நாஸ்ட்ரடாமஸின் புத்தகம் வெளியாகி 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னமும் அவர் அடுத்த ஆண்டைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என எதிர்பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ், தனது புத்தகத்தில், தீவுகளின் மன்னர் துரத்தப்படுவார் என்று எழுதியுள்ளார். அது மன்னர் சார்லசைக் குறித்தது என சிலர் நம்புகிறார்கள்.

மன்னராவார் என எதிர்பார்க்கப்படாத ஒருவரால் மன்னர் தனது பதவியை இழப்பார் என்று கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ். இளவரசர் வில்லியம் அடுத்து அரியணையேறுபவர் என்னும் நிலையில், மன்னராவார் என எதிர்பார்க்கப்படாத ஒருவர் எனறு நாஸ்ட்ரடாமஸ் கூறுவது இளவரசர் ஹரியைத்தான் என்கிறார்கள் சிலர்.

கடல்வழி மற்றும் தரைவழிப் போர் ஒன்று நடக்கும் என்றும், சிவப்பு எதிரி பயந்தால் வெளிறிப்போவான் என்றும் கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ். அவர் சிவப்பு எதிரி என்று கூறுவது சீனாவைத்தான் என்கிறார்கள் அவரை நம்புபவர்கள்.

வறண்ட பூமி மேலும் வறண்டுபோகும், அதன் பிறகு பெருவெள்ளங்கள் ஏற்படும் என்று கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.

அத்துடன், கடுமையான வெப்பம், பசி ஆகிய பிரச்சினைகளையும் உலகம் எதிர்கொள்ளும் என்றும் கணித்துள்ளார் அவர்.

புதிதாக போப் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கணித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ். உடல் நல பாதிப்பு காரணமாக பழைய போப் ஒருவர் இறக்க, புதிதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தனது 87ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய போப் பிரான்சிஸ்க்கு, பல உடல் நல பிரச்சினைகள் உள்ளன. நுரையீரல் அழற்சி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சமீபத்தில் அவர் ஐ.நா பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...