86038034
உலகம்செய்திகள்

2024ஆம் ஆண்டைக் குறித்த பிரான்ஸ் ஜோதிட நிபுணரின் கணிப்புகள்

Share

பிரான்சில் பிறந்தவரான ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் Les Propheties. 1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என 942 விடயங்கள் குறித்து கணித்து எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ்.

நாஸ்ட்ரடாமஸின் புத்தகம் வெளியாகி 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னமும் அவர் அடுத்த ஆண்டைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என எதிர்பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ், தனது புத்தகத்தில், தீவுகளின் மன்னர் துரத்தப்படுவார் என்று எழுதியுள்ளார். அது மன்னர் சார்லசைக் குறித்தது என சிலர் நம்புகிறார்கள்.

மன்னராவார் என எதிர்பார்க்கப்படாத ஒருவரால் மன்னர் தனது பதவியை இழப்பார் என்று கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ். இளவரசர் வில்லியம் அடுத்து அரியணையேறுபவர் என்னும் நிலையில், மன்னராவார் என எதிர்பார்க்கப்படாத ஒருவர் எனறு நாஸ்ட்ரடாமஸ் கூறுவது இளவரசர் ஹரியைத்தான் என்கிறார்கள் சிலர்.

கடல்வழி மற்றும் தரைவழிப் போர் ஒன்று நடக்கும் என்றும், சிவப்பு எதிரி பயந்தால் வெளிறிப்போவான் என்றும் கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ். அவர் சிவப்பு எதிரி என்று கூறுவது சீனாவைத்தான் என்கிறார்கள் அவரை நம்புபவர்கள்.

வறண்ட பூமி மேலும் வறண்டுபோகும், அதன் பிறகு பெருவெள்ளங்கள் ஏற்படும் என்று கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.

அத்துடன், கடுமையான வெப்பம், பசி ஆகிய பிரச்சினைகளையும் உலகம் எதிர்கொள்ளும் என்றும் கணித்துள்ளார் அவர்.

புதிதாக போப் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கணித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ். உடல் நல பாதிப்பு காரணமாக பழைய போப் ஒருவர் இறக்க, புதிதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தனது 87ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய போப் பிரான்சிஸ்க்கு, பல உடல் நல பிரச்சினைகள் உள்ளன. நுரையீரல் அழற்சி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சமீபத்தில் அவர் ஐ.நா பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....