உலகம்செய்திகள்

பிரான்சில் வெடித்த கலவரம் : 150 பேர் அதிரடியாக கைது

Share
Untitled 1 104 scaled
Share

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு வெடித்த வன்முறையில் இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியான நாண்டெர்ரே-வில் போக்குவரத்து நிறுத்தத்தில் 17 வயதுடைய நெயில் எம்(Nael m) என்ற கார் சாரதி பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர், இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து அப்பகுதியில் இரவோடு இரவாக 1200 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதல் நாள் இரவு நடந்த வன்முறையில் 31 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர், அத்துடன் இதில் 25 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததுடன் 40 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு வெடித்த வன்முறை இரண்டாவது நாள் இரவும் தொடரும் நிலையில் 150 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின்(Gerald Darmanin) வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வன்முறையில் டஜன் கணக்கான பொலிஸார் காயமடைந்து இருப்பதாகவும், குடியரசின் சின்னங்களான பள்ளிகள், காவல் நிலையங்கள் போன்றவை தீ வைத்து எரிக்கப்பட்டன என்றும் அமைச்சர் டார்மானின் தனது ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 2000 பொலிஸார் பாதுகாப்பு பணிகளுக்காக பாரிஸ் நகரில் குவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைச்சர்களுடனான அவசர கூட்டத்தை வியாழக்கிழமை கூட்டி இருப்பதாக அவரது அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...