8d07038a ed73 4a54 bfc2 52ca2e02ffb8 0
உலகம்செய்திகள்

தடுப்பூசி செலுத்தப்பட்ட பறவைகளிலும் பறவைக் காய்ச்சல்: பிரான்சில் கொல்லப்பட்ட 8,700 வாத்துகள்

Share

பிரான்சிலுள்ள வாத்துப்பண்ணை ஒன்றில், தடுப்பூசி பெற்ற பறவைகளுக்கும் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சிலுள்ள Vendee என்னுமிடத்தில் அமைந்துள்ள வாத்துப்பண்ணை ஒன்றிலுள்ள வாத்துகளுக்கு, நவம்பர் மாதம் பறவைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும் அந்த பண்ணையிலுள்ள வாத்து ஒன்றிற்கு பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இம்மாதம், அதாவது, ஜனவரி 2ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பண்ணையிலுள்ள 8,700 வாத்துகள் கொல்லப்பட்டுள்ளன.

டிசம்பரில், அதிக அபாய பகுதிகளில் உள்ள வாத்துக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும் என பிரான்ஸ் வேளாண்மை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த குறிப்பிட்ட பண்ணையில் உள்ள வாத்துக்களுக்கு அரசு உத்தரவின்படி மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...