4 19 scaled
உலகம்செய்திகள்

பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை? எழுந்த சர்ச்சை

Share

பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை? எழுந்த சர்ச்சை

பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை என பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியதாக பிரான்சில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.

ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றபின், பிரான்ஸ் நீதித்துறை அமைச்சரான Eric Dupont-Moretti, என்னை கேள்வி கேட்க வந்த பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை என கேள்வி எழுப்பினார்.

அவர் பாலின ரீதியாக விமர்சித்ததாகவும், அது நகைச்சுவை அல்ல, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமர்சனம் எழுந்தது.

திங்கட்கிழமையன்று, அமைச்சர் Eric மத்திய பிரான்சிலுள்ள Aurillac என்னும் இடத்தில் அமைந்துள்ள நீதிமன்றம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

மேலாடை அணியாத பெண்கள் கூட்டம் ஒன்று அந்த நீதிமன்றத்தை சேதப்படுத்தியுள்ளதால், சேதத்தை பார்வையிடுவதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.

நடந்தது என்னவென்றால், மரினா என்னும் ஒரு பெண், மேலாடையின்றி நகரில் வலம் வந்ததற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். அவரை தண்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒரு பெண்கள் கூட்டம் மேலாடையின்றி நீதிமன்றத்துக்குள் நுழைந்து அதை சேதப்படுத்தியுள்ளார்கள்.

அந்த மரினா என்னும் பெண், வெப்பம் அதிகமாக இருந்ததால், பல ஆண்கள் சட்டையில்லாமல் நடந்ததுபோலவே, தானும் சட்டை இல்லாமல் நடக்க விரும்பியதாக கூறியிருந்தார்.

ஆகவே, ஊடகவியலாளர்கள் சந்திப்புக்கு வந்த இடமும் சூடாகத்தான் உள்ளது. அதற்கு வந்த பெண்கள் மேலாடையில்லாமலா வந்தார்கள், இங்கே வெப்பம் அதிகமாக இல்லையா என்னும் கோணத்திலேயே அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், சட்டத்தை மதிப்பதுதான் சரியானது என்பதற்கு இந்த பெண் ஊடகவியலாளர்கள் ஆதாரம் என்பதை சுட்டிக்காட்டவே அவர் அப்படிச் சொன்னதாகவும், அமைச்சர் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...