புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல்: பிரித்தானியா கோபம்
உலகம்

புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல்: பிரித்தானியா கோபம்

Share

புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல்: பிரித்தானியா கோபம்

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக, பிரான்சுக்கு 500 மில்லியன் டொலர்களை பிரித்தானியா வழங்கியுள்ளது.

500 மில்லியன் பவுண்டுகளையும் வாங்கிக்கொண்டு, பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல் பிரித்தானியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மீன் பிடிக்கும் வலைகள் தண்ணீரில் மூழ்கிவிடாமல் மிதப்பதற்காக, அவற்றின் ஓரங்களில் பந்து போன்ற ரப்பர் மிதவைகளை இணைத்திருப்பார்கள்.

பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய்க்குள் பாயும் Canche என்னும் நதியில், அப்படி சில மிதவைகளை சேர்த்துக் கட்டி, அந்தக் கயிற்றின் இரண்டு ஓரங்களிலும் காங்கிரீட்டாலான கற்களை இணைத்து வைத்துள்ளது பிரான்ஸ் தரப்பு.

அதாவது, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் நோக்கி பயணிக்கும் கடத்தல்காரர்களின் படகுகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையாம்.

500 மில்லியன் பவுண்டுகளையும் வாங்கிக்கொண்டு, பிரான்ஸ் செய்துள்ள இந்த செயல் பிரித்தானியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் Canche நதியில் அமைத்துள்ள தடுப்பு, ஒரு வாத்தைக் கூட தடுக்காது என்று கூறியுள்ள கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Clarke-Smith, இது மொத்த அமைப்பையும் கேலி செய்வது போல் அமைந்துள்ளதுடன், ஆங்கிலக்கால்வாயில் உயிரிழப்புகள் அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது என்று விமர்சித்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த Nigel Mills, பிரான்ஸ் தரப்பு சீரியஸாக எதையும் செய்வதுபோல் தெரியவில்லை, கடத்தல்காரர்கள் பிரான்சின் இந்த செய்கையைக் கண்டால், விழுந்துவிழுந்து சிரிக்கப்போகிறார்கள் என்று கூறியுள்ளார்.

சனிக்கிழமையன்றுதான், பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்ததில், ஆறு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...

images 4 1
செய்திகள்உலகம்

சூடான் உள்நாட்டுப் போர்: 2.5 ஆண்டுகளாகத் தொடரும் மோதல் – ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரு மாதத்தில் 23 குழந்தைகள் பலி!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். (RSF) எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்டகாலமாக...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...