13 5
உலகம்செய்திகள்

எதிர்பார்த்ததுபோலவே மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்: பிரான்ஸ் அரசு தப்புமா?

Share

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்ததிலிருந்தே பிரான்ஸ் அரசியலில் பரபரப்பான சூழல்தான் நிலவிவருகிறது.

ஒரே ஆண்டில் நான்கு பிரதமர்களை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகி, முந்தைய பிரதமரான மிஷெல் பார்னியேர், சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தி பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்க்கட்சியினர் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்கள்.

அவர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பதவியிழக்க நேர்ந்தது.

இந்நிலையில், புதிய பிரதமரான ஃப்ரான்கோயிஸும், சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

ஆகவே, முந்தைய பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது போலவே தற்போது ஃப்ரான்கோயிஸ் அரசு மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், பிரான்ஸ் அரசு தப்புமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

நல்லவேளையாக, பிரான்சின் வலதுசாரி National Rally கட்சி, தாங்கள் நம்பிக்கையில்லாத் தீரமானத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளது.

ஆகவே, பிரதமர் தலை தப்பும், ஆட்சி கவிழாது என எதிர்பார்க்கப்படுகிறது.

விடயம் என்னவென்றால், பட்ஜெட் நிறைவேறாததால் ஏற்பட்டுள்ள நிலையில்லாத்தன்மையால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு, ஏற்கனவே சுமார் 12 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

ஆகவே, இம்முறையும் பட்ஜெட் நிறைவேறவில்லையென்றால், அதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....